நமது உடலின் ஆரோக்கியத்திற்கும், சுகாதாரத்திற்கும் குளியல் மிகவும் முக்கியம். காலையில் குளித்து விட்டு வெளியில் சென்றால்தான் அந்த நாள் முழுவதும் உற்சாகமாகவும், சுறுசுறுப்புடனும் இருக்க முடியும்.. இவை அனைத்துமே உண்மைதான் ஆனால் காலையில் குளிப்பதை விட இரவில் குளிப்பது உங்கள் ஆரோக்கியத்தை பன்மடங்கு அதிகரிக்கும் என்பது உங்களுக்கு தெரியுமா? காலையில் குளிப்பதை விட இரவில் குளிப்பது உங்கள் உடலில் பல அற்புத மாற்றங்களை உண்டாக்கும் என்று மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள். இது உங்களின் தூக்கத்தின் தரத்தையும், சுகாதாரத்தையும் மட்டும் […]
கோவில்பட்டி மந்திதிப்பு ரோடு லயன்ஸ் கிளப் அருகில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி (மார்க்சிஸ்ட்)யின் பாண்டவர் மங்கலம் ஊராட்சி ராஜீவ்நகர் கிளை சார்பில் அடிப்படை வசதிகள் கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பாண்டவர் மங்கலம் ஊராட்சி அன்னை தெரசா நகர் மற்றும் அனைத்து பகுதிகளிலும் வாரம் இருமுறை குடிதண்ணீர் வழங்கவேண்டும்,வாறுகால் இல்லாமல் சுகாதார கேடு ஏற்பட்டு இருக்கும் குடியிருப்பு பகுதிகளில் உடனடியாக வாறுகால் அமைத்து தரவேண்டும், பழுதடைந்த தெரு விளக்குகளை சீர் செய்து தரவேண்டும் என்பது போன்ற கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி […]
ஊழலுக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் மத்திய பா.ஜனதா அரசின் 9 ஆண்டு கால சாதனைகளை மக்களிடம் எடுத்து சொல்லும் வகையிலும் பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை ‘என் மண்’ ‘என் மக்கள்’ என்ற தலைப்பில் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். கடந்த மாதம் 28-ந் தேதி ராமேசுவரத்தில் தொடங்கிய இந்த பயணத்தை மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தொடங்கி வைத்தார். நடை பயணத்தின் போது மக்களை சந்திக்கும் அண்ணாமலை, அவர்கள் கொடுக்கும் மனுக்களையும் வாங்கி அவற்றுக்கு தீர்வு […]
கோவில்பட்டி நகராட்சி 20-வது வார்டு பகுதியில் கடந்த சில தினங்களாக நகராட்சியினால் வழங்கப்படும் குடிநீர் கழிவு நீர் போல கலங்கலாக வருவது மட்டுமின்றி துர்நாற்றமும் வீசுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த குடிநீரை பயன்படுத்த முடியமால் விலைக்கு குடிநீர் வாங்க வேண்டிய சூழ்நிலைக்கு அப்பகுதி மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். இது குறித்து நகராட்சியில் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை என்றும், தொடர்ந்து குடிநீர் கழிவு நீர் போல வருவதாகவும், உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பா.ஜ.க.வை சேர்ந்த 20வது […]
கோவில்பட்டி புதுரோடு பகுதியை சேர்;ந்தவர் சுப்பையா. இவருக்கு கோவில்பட்டி தாமஸ் நகரில் சொந்த வீடு உள்ளது. அந்த வீட்டை இடித்து விட்டு புதிய வீடு கட்டும் பணியை தொடங்கியுள்ளார். முதற்கட்டமாக பழைய வீட்டை இடிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த வீட்டை இடிக்கும் பணியில் ஆவல்நத்தம் பகுதியை சேர்ந்த மணிகண்டன்(வயது 38) என்பவர் இன்று காலையில் இருந்து ஈடுபட்டு இருந்ததாக கூறப்படுகிறது. வீட்டின் மேற்பகுதியை ட்ரில்லிங் மிஷன் வைத்து இடித்து கொண்டு இருக்கும் போது திடீரென மேற்பகுதி […]
கிழக்குத் திசையானது குடும்ப வாழ்விற்கு மிக மிக முக்கியமானது. கிழக்குத் திசையை இந்திரனின் திசை என்கிறோம். இந்திரன் தேவர்களின் தலைவன். குபேரன், வாயு, வருணன், அக்னி என அனைவரும் அவனுக்குள் அடக்கம். கிழக்குத் திசை மழலைச் செல்வத்தையும் மனமகிழ்ச்சியையும் அளிக்கும் திசை .கடந்த காலத்திலேயே உழன்று கொண்டிருப்பவர்களை நிகழ்காலத்திற்கு அழைத்துவந்து எதிர்காலத்தை நோக்கி சிந்திக்க வைப்பவன் இந்திரன். அமராவதி பட்டின அதிபதி இந்திரன். அப்பட்டினம் யாராலும் கட்டப்பட்டதன்று. விசுவகர்மா என்ற தேசதச்சனின் தபோ பலத்தினால் நிர்மாணம் செய்யப்பட்டது. […]
மதுரை சகோதயா பள்ளிகள் சார்பில் மண்டல அளவிலான விளையாட்டு போட்டிகள் கோவில்பட்டியில் நடைபெற்றன. போட்டிகளில் பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு பப்ளிக் பள்ளி மாணவர்கள் முகம்மது சுஹைல், முகம்மது பர்வேஷ் மற்றும் ஆரிப், முகம்மது யூனுஸ் ஆகியோர் கேரம் போட்டியில் இரட்டையர் பிரிவில் தங்கப் பதக்கம், ஒற்றையர் பிரிவில் மாணவர்கள் முகம்மது பர்வேஷ், அப்துல்லா ஆகியோர் வெள்ளிப் பதக்கம் பெற்றனர். பெண்கள் ஒற்றையர் பிரிவில் இப்பள்ளி மாணவி பிரியவதனா […]
அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்டு இருந்த 2 ஆண்டு சிறைத்தண்டனையை சுப்ரீம் கோர்ட்டு நிறுத்தி வைத்துள்ளதால், அவரது எம்.பி. பதவியை மீண்டும் வழங்க வேண்டும் என காங்கிரஸ் கோரிக்கை விடுத்து வந்தது. இது தொடர்பாக கட்சியின் மக்களவை தலைவர் ஆதிர்ரஞ்சன் சவுத்ரி, சபாநாயகர் ஓம் பிர்லாவை சந்தித்து வேண்டுகோள் விடுத்தார். மேலும் மக்களவை செயலகத்தில் மனுவும் அளிக்கப்பட்டு இருந்தது. இந்த மனுவை மக்களவை செயலகம் இன்று பரிசீலிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. எதிர்க்கட்சிகளும், பதவி நீக்கம் செய்யும்போது […]
கோவில்பட்டி கம்பன் கழக 2-ஆம் ஆண்டு விழா கதிரேசன் கோயில் சாலையில் உள்ள ஆர்ததி மஹாலில் 2 நாட்கள் நடைபெற்றது. தொடக்க நிகழ்ச்சிக்கு கம்பன் கழக நிறுவனர் எஸ்.எஸ்.டி.கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார்.. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தைச் சேர்ந்த பொ.முருகன், ஓய்வு பெற்ற கால்நடை பராமரிப்புத் துறை இணை இயக்குநர் நாராயணசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். டாக்டர் கோமதி, காமநாயக்கன்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியை மணிமதி, கம்பன் கழகத் தலைவர் லட்சுமணப்பெருமாள், நிறுவனர் கிருஷ்ணமூர்த்தி, […]
காமநாயக்கன்பட்டி புனித பரலோகமாதா திருத்தல விண்ணேற்பு பெருவிழா தொடக்கம்; கொடியேற்ற நிகழ்ச்சியில் பக்தர்கள்
கோவில்பட்டியை அடுத்த காமநாயக்கன்பட்டியில் புனித பரலோக மாதா மாதா விண்ணேற்பு பெருவிழாவை முன்னிட்டு நேற்று இரவு 7 மணிக்கு புனித மிக்கேல் அதிதூதரின் சப்பர பவனி நடைபெற்றது. தொடர்ந்து 8 மணியளவில் கோவில் வளாகத்தில் உள்ள கொடிமரத்தில் தூத்துக்குடி மறை மாவட்ட முன்னாள் ஆயர் இவோன்அம்புரோஸ் தலைமையில் பெருவிழா கொடியேற்றப்பட்டது. விழாவில் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ., அ.தி.மு.க. கிழக்கு ஒன்றிய செயலாளர் வண்டானம் கருப்பசாமி, தி.மு.க. கிளை செயலாளர் லூர்துராஜ் பங்கேற்றனர். கொடியேற்ற நிகழ்ச்சியில் […]