• June 7, 2025

அடிப்படை வசதிகள் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்

 அடிப்படை வசதிகள் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்

கோவில்பட்டி மந்திதிப்பு ரோடு லயன்ஸ் கிளப் அருகில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி (மார்க்சிஸ்ட்)யின் பாண்டவர் மங்கலம் ஊராட்சி ராஜீவ்நகர் கிளை  சார்பில் அடிப்படை வசதிகள் கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பாண்டவர் மங்கலம் ஊராட்சி அன்னை தெரசா நகர் மற்றும் அனைத்து பகுதிகளிலும் வாரம் இருமுறை குடிதண்ணீர் வழங்கவேண்டும்,வாறுகால் இல்லாமல் சுகாதார கேடு ஏற்பட்டு இருக்கும் குடியிருப்பு பகுதிகளில் உடனடியாக வாறுகால் அமைத்து தரவேண்டும், பழுதடைந்த தெரு விளக்குகளை சீர் செய்து தரவேண்டும் என்பது போன்ற கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கிளை செயலாளர் மாரியப்பன் தலைமை தாங்கினார். தேவ பிரகாஷ், ருக்மணி, அய்யலுசாமி, முத்துராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய செயலாளர் தெய்வேந்திரன் சிறப்புரை ஆற்றினார்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *