பணப்புழக்கம் அதிகரிக்க ஸ்ரீ இந்திரன் மந்திரம்

கிழக்குத் திசையானது குடும்ப வாழ்விற்கு மிக மிக முக்கியமானது. கிழக்குத் திசையை இந்திரனின் திசை என்கிறோம். இந்திரன் தேவர்களின் தலைவன். குபேரன், வாயு, வருணன், அக்னி என அனைவரும் அவனுக்குள் அடக்கம். கிழக்குத் திசை மழலைச் செல்வத்தையும் மனமகிழ்ச்சியையும் அளிக்கும் திசை .
கடந்த காலத்திலேயே உழன்று கொண்டிருப்பவர்களை நிகழ்காலத்திற்கு அழைத்துவந்து எதிர்காலத்தை நோக்கி சிந்திக்க வைப்பவன் இந்திரன். அமராவதி பட்டின அதிபதி இந்திரன். அப்பட்டினம் யாராலும் கட்டப்பட்டதன்று. விசுவகர்மா என்ற தேசதச்சனின் தபோ பலத்தினால் நிர்மாணம் செய்யப்பட்டது. இங்கு; நெசவாளர்கள்- பொற்கொல்லர்கள் கிடையாது. இங்கு, கற்பகத் தருவே ஆடைகளையும்-நகைகளையும் கொடுக்கிறது. இங்கு சமையல் செய்வதும் கிடையாது. காமதேனு என்ற தெய்வீகப் பசுவே அனைவருக்கும் உணவளிக்கிறது. முப்பத்து முக்கோடி தேவர்களும் இங்கு வசிக்கின்றனர்.
இந்திரனை தேவேந்திரன் என்றும் அழைப்பதுண்டு. இவன் தேவர்களுக்கு அரசன்.இவனது ஆயுதம் வஜ்ரம், இந்திரதிசையின் அதிபதி சூரியன். சூரியனின்றி கோள்கள் இல்லை. கோலாகலமும் இல்லை.
மிகவும் சக்தி வாய்ந்த கீழ்க்கண்ட இந்திரனுக்குரிய மந்திரத்தை தினசரி அறுபது முறை கூறி வர பணப்புழக்கம் அதிகரிக்கும்- வீடு,வாகன வசதிகள் உண்டாகும்.
ஸ்ரீ இந்திர காயத்ரி:
ஓம் தேவராஜய வித்மஹே
வஜ்ரஹஸ்தாய தீமஹி
தந்நோ இந்த்ர ப்ரசோதயாத்
ஓம் லம் வஜ்ரஹஸ்தாய வித்மஹே
சகஸ்ராக்ஷாய தீமஹி
தந்நோ இந்த்ர ப்ரசோதயாத்.
ஓம் சஹஸ்ரநேத்ராய வித்மஹே
வஜ்ரஹஸ்தாய தீமஹி|
தன்னோ இந்திர ப்ரசோதயாத்
தகவல்-காசி விஸ்வநாதன், திருநெல்வேலி-
