• June 7, 2025

கோவில்பட்டியில் மண்டல அளவிலான கேரம்போட்டி: தென்காசி பள்ளி மாணவர்களுக்கு தங்கப்பதக்கம்

 கோவில்பட்டியில் மண்டல அளவிலான கேரம்போட்டி: தென்காசி பள்ளி மாணவர்களுக்கு தங்கப்பதக்கம்

மதுரை சகோதயா பள்ளிகள் சார்பில் மண்டல அளவிலான விளையாட்டு போட்டிகள் கோவில்பட்டியில் நடைபெற்றன. போட்டிகளில் பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு பப்ளிக் பள்ளி மாணவர்கள் முகம்மது சுஹைல், முகம்மது பர்வேஷ் மற்றும் ஆரிப், முகம்மது யூனுஸ் ஆகியோர் கேரம் போட்டியில் இரட்டையர் பிரிவில் தங்கப் பதக்கம், ஒற்றையர் பிரிவில் மாணவர்கள் முகம்மது பர்வேஷ், அப்துல்லா ஆகியோர் வெள்ளிப் பதக்கம் பெற்றனர். 

பெண்கள் ஒற்றையர் பிரிவில் இப்பள்ளி மாணவி பிரியவதனா தங்கப்பதக்கம் பெற்றார். வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளை ஆக்ஸ்போர்டு கல்வி குழும சட்ட ஆலோசகரும் உச்சநீதிமன்ற வழக்கறிஞருமான கே.திருமலை, பள்ளி தாளாளர் அன்பரசி திருமலை, பள்ளி சட்ட ஆலோசகரும் உச்சநீதிமன்ற வழக்கறிஞருமான தி.மிராக்ளின் பால்சுசி மற்றும் ஆசிரியர், ஆசிரியைகள் பாராட்டினர். 

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *