• May 20, 2024

Month: July 2023

கோவில்பட்டி

கோவில்பட்டியில் ஆகஸ்டு 12-ந்தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்;ப்பு மற்றும் தொழில்நெறிவழிகாட்டும் மையம், தமிழ்நாடுமாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் கோவில்பட்டி நாடார் மேல்நிலைப்பள்ளி இணைந்து நடத்தும்  தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் கோவில்பட்டி நாடார் மேல்நிலைப் பள்ளியில் 12.8.2023 காலை 9 மணிக்கு நடைபெற உள்ளது.   தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி, சமூகநலம் – மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பெ.கீதாஜீவன் மற்றும்  மீன்வளம்–மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் […]

தூத்துக்குடி

தூத்துக்குடி பனியமய மாதா கோவில் திருவிழா: 10 இடங்களில் பக்தர்கள் வாகனங்களை நிறுத்த

தூத்துக்குடி பனிமய மாதா கோவில் 16வது தங்கத்தேர் திருவிழா) கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. ஆகஸ்டு 5-ந் தேதி  வரை விழா நடைபெற உள்ளது. திருவிழாவை முன்னிட்டு பொதுமக்கள் பயன்பெறும் வகையில் மக்கள் கூட்டம் அதிகமாக வரும் திருவிழாவின் முக்கிய நிகழ்வுகள் நடைபெறும் நாட்களான 29.7.2023, 30.7.2023, 3.08.2023, 4.08.2023 மற்றும் 5.08.2023 ஆகிய நாட்களில் பொதுமக்கள் தங்கள் வாகனங்களை பாதுகாப்பாக நிறுத்துவதற்கு தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பாக 10 இடங்களில் வாகன நிறுத்தும் (Parking) வசதி […]

கோவில்பட்டி

இலுப்பையூரணி சண்முக நகரில் புதிய சாலை அமைக்கும் பணி

கோவில்பட்டி இலுப்பையூரணி பஞ்சாயத்திற்குட்பட்ட சண்முக நகரில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேமபாட்டு நிதியில் இருந்து ரூ. 15 லட்சம் மதிப்பீட்டில் புதிய சாலை அமைக்கும் பணிகளை கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் கோவில்பட்டி யூனியன் துணை சேர்மன் பழனிச்சாமி, அ.தி.மு.க. நகர செயலாளர் விஜய பாண்டியன், ஒன்றிய செயலர்கள் அன்புராஜ், அய்யாத்துரை பாண்டியன், முன்னாள் மாவட்ட சேர்மன் சத்யா, மாநில பொதுக்குழு உறுப்பினர் ராமச்சந்திரன், ஆவின் கூட்டுறவு சங்கத் தலைவர் தாமோதரன், கவுன்சிலர்கள் […]

செய்திகள்

80 பொறியியல் கல்லூரிகளுக்கு தொடர் அங்கீகாரம் வழங்காமல் அண்ணா பல்ககலைக்கழகம் நிறுத்தி வைப்பு

தமிழகத்தில் உள்ள 80 பொறியியல் கல்லூரிகளுக்கு தொடர் அங்கீகாரம் வழங்காமல் அண்ணா பல்கலைக்கழகம் நிறுத்தி வைத்துள்ளது. போதிய உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாததால் அண்ணா பல்கலைக்கழகம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. இந்த 80 பொறியியல் கல்லூரிகளை நேரில் ஆய்வு செய்ய அண்ணா பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது. உள்கட்டமைப்பு வசதியின்றி செயல்படும் கல்லூரிகள் உடனடியாக அவற்றை சரி செய்ய அண்ணா பல்கலைக்கழகம் அறிவுரை வழங்கியுள்ளது. மேலும் மாணவர்கள், பேராசிரியர்கள் எண்ணிக்கை, ஆய்வகங்கள், நூலகம் ஆகியவற்றை ஆய்வு செய்த பின்னரே அங்கீகாரம் […]

தூத்துக்குடி

திருச்செந்தூரில் வெள்ளை யானை வீதி உலா

ஆடி மாதம் சுவாதி நட்சத்திர தினத்தில் 63 நாயன்மார்களில் ஒருவரான சுந்தரமூர்த்தி நாயனாருக்கு திருக்கைலாய மலையில் சிவபெருமான் ஐராவதம் (வெள்ளை யானை) உருவத்தில் காட்சி கொடுத்தார் என்பது ஐதீகம்.இதை நினைவு கூறும் வகையில், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நேற்று அதிகாலை 5 மணிக்கு கோவில் நடைதிறக்கப்பட்டு, 5.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 6 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், தீபாராதனையும், தொடர்ந்து மற்ற கால பூஜைகளும் நடைபெற்றது. மாலையில், கோவில் யானையின் உடல் முழுவதும் மாவு […]

கோவில்பட்டி

கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பின் செயற்குழு கூட்டம் 

கோவில்பட்டி கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. நிர்வாகி கருப்பசாமி தலைமை தாங்கினார். வழக்கறிஞர் பெஞ்சமின் பிராங்களின் முன்னிலை வகித்தார். கூட்டமைப்பின் தலைவர் க.தமிழரசன் கீழ்க்கண்ட தீர்மானங்களை முன்மொழிந்தார். *மணிப்பூர் மாநிலத்தில் நடைபெற்றுவரும் மனித உரிமை மீறலைக் கட்டுப்படுத்தாத மணிப்பூர் மாநில அரசு உடனடியாக பதவி விலக வேண்டும் * மணிப்பூர் மலைகளில் கிடைக்கும் கனிம வளங்களை கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு தாரை வார்க்கும் நோக்கத்தோடு மணிப்பூர் கலவரத்தை கண்டும் காணாமல் இருக்கும் மத்திய  அரசுக்கு கண்டனம். *தமிழ்நாட்டில் […]

கோவில்பட்டி

கோவில்பட்டி ரோட்டரி சங்க புதிய உறுப்பினர்களுக்கு பயிற்சி

கோவில்பட்டி ரோட்டரி சங்கம் சார்பில் புதிய உறுப்பினர்களுக்கான  பயிற்சி முகாம் யூனியன் கிளப் வளாகத்தில்  நடைபெற்றது. ரோட்டரி சங்க தலைவர் வெங்கடேஷ் தலைமை தாங்கினார் ரோட்டரி மாவட்டதலைவர் விநாயகா ரமேஷ், மாவட்ட உதவி ஆளுநர் முத்துச்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சங்க செயலாளர் சரவணன் அனைவரையும் வரவேற்றார். மாவட்டம முன்னாள் ஆளுநர் முனைவர் ஷேக் சலீம்,கிளப் சர்வீஸ் அவன்யூ சேர்மன் ஆறுமுகச்செல்வன், மாவட்ட உறுப்பினர் சேர்க்கை சேர்மன் ராமசுப்பிரமணிய ராஜா ஆகியோர் ரோட்டரி செயல்பாடுகள் குறித்து பயிற்சி […]

கோவில்பட்டி

லாரி ஒர்க் ஷாப்பில் தீவிபத்து; ரூ.5 லட்சம் இயந்திரங்கள் சேதம்  

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கிருஷ்ணா நகரை சேர்ந்த கருப்பசாமி என்பவர் கூடுதல் பஸ் நிலையம் அருகே லாரி ஒர்க் ஷாப் நடத்தி வருகிறார். ஒர்க் ஷாப் அருகில் கிடந்த காய்ந்த சருகுகள் கடும் வெயிலுக்கு திடிரென தீ பிடித்து பற்றி எரிந்தது, அந்த நெருப்பு காற்றுக்கு லாரி ஒர்க் ஷாப்பிற்குள்ளும் பரவி பற்றி எரிந்தது. இதனைப் பார்த்த லாரி ஒர்க் ஷாப்பில் பணியாற்றி கொண்டு இருந்த ஊழியர்கள் அலறி அடித்துக் கொண்டு வெளியே ஓடினர். இதையடுத்து தீயணைப்பு […]

செய்திகள்

இரும்பு பெட்டியில் ரூ.5600 கோடி முறைகேடு ஆவணங்கள்: கவர்னருடன் அண்ணாமலை சந்திப்பு

சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியை தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை இன்று சந்தித்தார். இந்த சந்திப்பு குறித்து அண்ணாமலை டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அந்த பதிவில் , பா.ஜனதா மூத்த தலைவர்களுடன் இணைந்து இன்று கவர்னர் ஆர்.என்.ரவியை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. தி.மு.க. அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள்,எம்.பி.க்கள் மற்றும் குடும்பம் செய்த ரூ.5600 கோடி மதிப்பிலான 3 முறைகேடுகள் தொடர்பான பினாமி ஆவணங்கள் அடங்கிய ஆவணங்களுடன் தி.மு.க. பைல்ஸ் 2 குறித்து […]

கோவில்பட்டி

கோவில்பட்டியில் நாளை ஓவிய போட்டி; மாணவ, மாணவிகள் பங்கேற்கலாம்

கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் உள்ள கி.ராஜநாராயணன் நினைவரங்கத்தில் நாளை வியாழக்கிழமை காலை 10 மணி அளவில் ஓவியமணி சி.கொண்டையராஜூ 47-வது நினைவு தினத்தை முன்னிட்டு கொண்டையராஜூ ஆர்ட் பவுண்டேஷன் சார்பில் ஓவியப்போட்டி நடத்தப்படுகிறது. எல்.கே.ஜி., யு.கே.ஜி.மாணவர்களுக்கு உனக்கு பிடித்த பழம், 2-வது  வகுப்பு மாணவர்களுக்கு அழகிய பூ (இலையுடன்), 4,5ம் வகுப்பு மானவர்களுக்கு நமது தேசிய பறவை, 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஏதேனும் ஒரு காட்டு விலங்கு, 9,10 ம் வகுப்பு மாணவர்களுக்கு இளங்காலை […]