டாக்டர் ராமதாஸ் 85-வது பிறந்தநாள்; கோவில்பட்டி கோவிலில் சிறப்பு பூஜை

பாட்டாளி மக்கள் கட்சி நிறுவன தலைவர் டாக்டர் ராமதாஸ் இன்று தனது 85 வது பிறந்த நாளை கொண்டாடினார். அவரது பிறந்தநாநாளை பசுமை தாயக நாளாக பாட்டாளி மக்கள் கட்சியினர் கொண்டாடினர்..
கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவிலில் சிறப்பு பூஜைகள் செய்து மரக்கன்றுகள் நட்டு பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. பா.ம.க.வடக்கு மாவட்ட செயலாளர் ராமச்சந்திரன் தலைமையில், செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவனநாதசாமி கோவிலில் டாக்டர் ராமதாஸ் பெயரில் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. தொடர்ந்து கோவில் வளாகத்தில் மரக்கன்றுகளை வடக்கு மாவட்ட செயலாளர் ராமச்சந்திரன் நட்டினார் .
இதையடுத்து கோவில் முன்புறமுள்ள வளாகத்தில் வெடி வெடித்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கபட்டது. நிகழ்ச்சியில் மூவேந்தர் மருதம் முன்னேற்ற கழக நிறுவன தலைவர் அன்புராஜ் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு அன்னதானத்தை தொடக்கி வைத்தார்.
பசுமைத்தாயகம் மாவட்டதலைவர் மாடசாமி, பா.ம.க.மாநில அமைப்பு செயலாளர் கருப்பசாமி, மாவட்ட அமைப்பு செயலாளர் காளிராஜ், மாவட்ட இளைஞரணி செயலாளர் மகாராஜன் , நகர செயலாளர் கருப்பசாமி, கிழக்கு, மேற்கு ஒன்றிய செயலாளர்கள் முத்துகிருஷ்ணன் , லெனின் , நகர மகளிர் அணி தலைவி ராமலட்சுமி , பொருளாளர் சேர்மராஜ் , நகர இளைஞரணி செயலாளர் சண்முகராஜா உட்பட பா.ம.க வினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
