கோவில்பட்டி, கே.ஆர்.மருத்துவம் மற்றும் கல்வி அறக்கட்டளையின் சார்பில், கே.ஆர்.கல்வி நிறுவனங்கள், லட்சுமி அம்மாள் ஸ்போர்ட்ஸ் அகாடமியுடன் இணைந்து நடத்தும் லட்சுமி அம்மாள் நினைவு கோப்பைக்கான 12-வது அகில இந்திய ஆக்கிப் போட்டிகள் கோவில்பட்டியில் நடைபெற இருக்கிறது. நாளை 18ம் தேதி முதல் 28ம் தேதி வரை கோவில்பட்டி செயற்கை புல்வெளி மைதானத்தில் பகல் இரவு ஆட்டமாக மின்னொளியில் போட்டிகள் நடைபெறுகின்றன, இப்போட்டியின் தொடக்க விழா மே 18ம் தேதி (நாளை) மாலை 5. மணி அளவில் நடைபெற […]
கோவில்பட்டி தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்தி நேற்று தொடங்கியது. கழுகுமலை உள்வட்டம் ஜமீன் தேவர்குளம், கே. வெங்கடேஸ்வரபுரம், கழுகுமலை, வில்லிசேரி, இடைசெவல், வானரமுட்டி பகுதி பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது. மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் அமுதா முகாமிற்கு தலைமை தாங்கி பொது மக்களிடம் இருந்து மனுக்கள் பெற்றார். அவரிடம் 32 மனுக்கள் கொடுக்கப்பட்டன. நிகழ்ச்சியில் கோவில்பட்டி தாசில்தார் வசந்த மல்லிகா மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இன்று (புதன் கிழமை) கழுகுமலை உள்வட்டம் நாலாட்டின் புத்தூர், முடுக்கு […]
தமிழ்நாட்டில் பல்வேறு ஐ. ஏ. எஸ். அதிகாரிகள் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். இதுதொடர்பாக தலைமைச் செயலாளர் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,கூறப்பட்டு இருப்பதாவது :-நாகை மாவட்ட ஆட்சியராக இருக்கும் அருண் தம்புராஜ், கடலூர் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார். கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியராக இருக்கும் தீபக் ஜேக்கப், தஞ்சை மாவட்ட ஆட்சியராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் ஜான் வர்கீஸ் நாகை மாவட்ட ஆட்சியராக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். […]
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சாலைப்புதூர் இ.பி.காலனியில் உள்ள ஸ்ரீ அம்மச்சியார் திருக்கோவில் திருவிழாவினை முன்னிட்டு அன்னதான நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சரும், கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர்.செ.ராஜூ கலந்து கொண்டு அன்னதான நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். இதனை தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில் கூறியதாவது :-திமுக ஆட்சி பொறுப்பு ஏற்றது முதல் தமிழகம் போதை விற்பனை செய்யும் சந்தையாக (மாநிலமாக) மாறி விட்டது.சட்டமன்ற கூட்டத்தொடரில் காவல்துறை மானியக்கோரிக்கையில் இது குறித்து புள்ளி விபரங்களுடன் முன்னாள் முதல்வரும் […]
தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே கீழ் ஈரால் – மஞ்ச நாயக்கன்பட்டி இடையே சாலையில் நின்று கொண்டிருந்த லாரி மீது, தூத்துக்குடியில் இருந்து கோவில்பட்டி நோக்கி வந்த தனியார் பஸ் (அரவிந்த்) மோதி விபத்துக்குள்ளானது.இதில் பஸ்சின் முன் பகுதி முற்றிலுமாக சேதம் அடைந்தது. பஸ்சில் பயணம் செய்த 40 க்கும் மேற்பட்ட பயணிகள் காயம் அடைந்தனர்.காயம் அடைந்த பயணிகள் எட்டயபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர்.இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
கோவில்பட்டி ஜே.காம்.கூட்டத்தில் தொழில் முனைவோருக்கு மித்ரா சாப்ட்வேர் நிறுவனர் சரவணமுத்து ஆலோசனை
ஜே.சி.ஐ அமைப்பின் துணை அமைப்பான ஜே.காம். ,வர்த்தக இணைப்புக்கான ஒரு அங்கமாக திகழ்கிறது. கோவில்பட்டி ஜே.காம் அமைப்பின் இந்த மாத 3-வது வார வர்த்தக கற்றல் கூட்டம் இன்று காலை எட்டயபுரம் ரோட்டில் உள்ள சிறுதொழில் தீப்பெட்டி தயாரிப்பாளர் சங்க கட்டிடத்தில் நடைபெற்றது. ஜே,காம் சேர்மன் அருண்பிரசாத் தலைமை தாங்கினார். துணை தலைவர் சுரேந்தர், திருநெல்வேலி ஜே.காம் பயிற்சியாளர் மாரியப்பன் ஆகியோர் கலந்து கொண்டனர். சிறப்பு விருந்தினராக கோவில்பட்டியை சேர்ந்த மித்ரா சாப்ட்வேர் நிறுவனர் சரவணமுத்து கலந்து கொண்டார். […]
கோவில்பட்டி கோட்டத்தில் 8 துணை மின் நிலையங்களில் வருகிற 20-ந் தேதி (சனிக்கிழமை ) காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக இந்த துணை நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் மின்சார சப்ளை நிறுத்தப்பட உள்ளது.அதன்படி 8 துணை மின்நிலையங்கள் மற்றும் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படும் அதற்கு உட்பட்ட பகுதிகளும் வருமாறு:-கழுகுமலை:- கழுகுமலை, குமராபுரம், வேலாயுதபுரம், கரடிகுளம், சி.ஆர்.காலனி, வெள்ளப்பனேரி,குருவிகுளம். கோவில்பட்டி:- கோவில்பட்டி, புதுக்கிராமம், இலுப்பையூரணி, வேலாயுதபுரம், சங்கரலிங்கபுரம், […]
தூத்துக்குடி மாவட்டத்தில் பாஞ்சாலங்குறிச்சி திருவிழாவின்போது அபாயகரமாகவும், பொதுமக்களுக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் விதிமுறைகளை மீறி செயல்பட்டதாக தட்டப்பாறை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ஒரு கனரக வாகனம் மற்றும் 5 இருசக்கர வாகனங்கள் மீதும், திருச்செந்தூர் தாலுகா காவல் நிலையம் மற்றும் திருச்செந்தூர் கோவில் காவல் நிலையம் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தலா 2 இரு சக்கர வாகனங்கள் மீதும், ஆத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ஒரு இரு சக்கர வாகனமும், ஓட்டப்பிடாரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட […]
தூத்துக்குடி மாவட்டத்தில் கள்ளச்சாராயம், கஞ்சா மற்றும் போதைப் பொருள் விற்பனை மற்றும் கடத்தலை முற்றிலுமாக ஒழிக்க தூத்துக்குடி போதைப்பொருள் தடுப்பு மற்றும் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் சிவசுப்பு மேற்பார்வையில் காவல் ஆய்வாளர் தலைமையில் உதவி ஆய்வாளர் மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படை அமைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் உத்தரவிட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்கள், பாண்டிச்சேரி மற்றும் பிற மாநிலங்களில் தயாரிக்கப்படும் மதுபானங்களை கடத்தி வந்து தூத்துக்குடி மாவட்டத்தில் […]
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பங்களா தெருவை சேர்ந்த பழனிச்சாமி என்பவரது மனைவி உமா(57). இவர் நேற்றிரவு வெப்பத்தின் தாக்கம் காரணமாக வீட்டிற்குள் இருக்க முடியமால் காற்று வாங்க வீட்டின் வெளியே நாற்காலி போட்டு அமர்ந்து இருந்தார் . அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் மின்னல்வேகத்தில் உமா கழுத்தில் இருந்து 12 பவுன் தங்கநகையை பறித்து விட்டு தப்பி சென்றனர். நகையை பறிகொடுத்த உமா, கோவில்பட்டி கிழக்கு போலீசில் புகார் செய்தார். இதே போல் கோவில்பட்டி வ.உ.சி. […]