• June 8, 2025

2 பெண்களிடம் நகை பறிப்பு; மோட்டார் சைக்கிள் திருடர்கள் கைவரிசை

 2 பெண்களிடம் நகை பறிப்பு; மோட்டார் சைக்கிள் திருடர்கள் கைவரிசை

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பங்களா தெருவை சேர்ந்த பழனிச்சாமி என்பவரது மனைவி உமா(57). இவர் நேற்றிரவு வெப்பத்தின் தாக்கம் காரணமாக வீட்டிற்குள் இருக்க முடியமால் காற்று வாங்க வீட்டின் வெளியே நாற்காலி  போட்டு அமர்ந்து இருந்தார்

. அப்போது மோட்டார் சைக்கிளில்  வந்த இருவர் மின்னல்வேகத்தில் உமா கழுத்தில் இருந்து 12 பவுன் தங்கநகையை பறித்து விட்டு தப்பி சென்றனர். நகையை பறிகொடுத்த உமா, கோவில்பட்டி கிழக்கு போலீசில் புகார் செய்தார்.

இதே போல் கோவில்பட்டி வ.உ.சி. நகரைச் சேர்ந்த மாரிச்செல்வம் மனைவி வெள்ளத்தாய் (44). இவர் ஏ.கே.எஸ். தியேட்டர் சாலையில் ஜவுளிக்கடை அருகே உள்ள தெருவில் நடந்து வந்து கொண்டு இருந்த போது, மோட்டார் சைக்கிளில்  வந்த இருவர் வெள்ளத்தாய் கழுத்தில் அணிந்து இருந்த 6 பவுன் தங்க நகையை பறித்து கொண்டு தப்பி சென்றுவிட்டனர்,

இது குறித்து  குறித்து கோவில்பட்டி மேற்கு போலீஸ் நிலையத்தில் வெள்ளத்தாய் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி 2 பெண்களிடம் கைவரிசை காட்டிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *