• June 8, 2025

போதைப் பொருள் விற்பனை மற்றும் கடத்தலை ஒழிக்க தனிப்படை அமைப்பு

 போதைப் பொருள் விற்பனை மற்றும் கடத்தலை ஒழிக்க தனிப்படை அமைப்பு

தூத்துக்குடி மாவட்டத்தில் கள்ளச்சாராயம், கஞ்சா மற்றும் போதைப் பொருள் விற்பனை மற்றும் கடத்தலை முற்றிலுமாக ஒழிக்க தூத்துக்குடி போதைப்பொருள் தடுப்பு மற்றும் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் சிவசுப்பு மேற்பார்வையில் காவல் ஆய்வாளர் தலைமையில் உதவி ஆய்வாளர் மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படை அமைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் உத்தரவிட்டுள்ளார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்கள், பாண்டிச்சேரி மற்றும் பிற மாநிலங்களில் தயாரிக்கப்படும் மதுபானங்களை கடத்தி வந்து தூத்துக்குடி மாவட்டத்தில் விற்பனை செய்பவர்கள், சட்டவிரோதமாக கள் இறக்கி விற்பனை செய்பவர்கள்,

Rectified spirit and spurious spirit  போன்ற கலப்பட மதுபானங்கள் தயார் செய்து விற்பனை செய்பவர்கள், கஞ்சா  மற்றும் கொடிய போதை மருந்து, மாத்திரைகள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபடுபவர்கள் பற்றிய தகவல் தெரிந்தவர்கள் போதைப் பொருள் தடுப்பு மற்றும் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர். சிவசுப்புவின் அலைபேசி மற்றும் வாட்ஸ்அப் எண் 98409 23723 என்ற எண்ணிற்கு தயங்காமல் தகவல் தெரிவிக்குமாறும், தகவல் தருபவர்கள் பற்றிய விபரம் ரகசியமாக வைக்கப்படும் என்றும்  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன், பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளார்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *