• June 8, 2025

எட்டயபுரம் அருகே நின்று கொண்டிருந்த லாரி மீது பஸ் மோதியது ;40 பயணிகள் காயம்

 எட்டயபுரம் அருகே நின்று கொண்டிருந்த லாரி மீது பஸ் மோதியது ;40 பயணிகள் காயம்

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே கீழ் ஈரால் – மஞ்ச நாயக்கன்பட்டி இடையே சாலையில் நின்று கொண்டிருந்த லாரி மீது, தூத்துக்குடியில் இருந்து கோவில்பட்டி நோக்கி வந்த தனியார் பஸ் (அரவிந்த்) மோதி விபத்துக்குள்ளானது.
இதில் பஸ்சின் முன் பகுதி முற்றிலுமாக சேதம் அடைந்தது. பஸ்சில் பயணம் செய்த 40 க்கும் மேற்பட்ட பயணிகள் காயம் அடைந்தனர்.
காயம் அடைந்த பயணிகள் எட்டயபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர்.இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *