கோவில்பட்டி ஜே.காம்.கூட்டத்தில் தொழில் முனைவோருக்கு மித்ரா சாப்ட்வேர் நிறுவனர் சரவணமுத்து ஆலோசனை

சரவணமுத்துவுக்கு கண்ணப்பன் நினைவு பரிசு வழங்கிய காட்சி.
ஜே.சி.ஐ அமைப்பின் துணை அமைப்பான ஜே.காம். ,வர்த்தக இணைப்புக்கான ஒரு அங்கமாக திகழ்கிறது. கோவில்பட்டி ஜே.காம் அமைப்பின் இந்த மாத 3-வது வார வர்த்தக கற்றல் கூட்டம் இன்று காலை எட்டயபுரம் ரோட்டில் உள்ள சிறுதொழில் தீப்பெட்டி தயாரிப்பாளர் சங்க கட்டிடத்தில் நடைபெற்றது. ஜே,காம் சேர்மன் அருண்பிரசாத் தலைமை தாங்கினார். துணை தலைவர் சுரேந்தர், திருநெல்வேலி ஜே.காம் பயிற்சியாளர் மாரியப்பன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
சிறப்பு விருந்தினராக கோவில்பட்டியை சேர்ந்த மித்ரா சாப்ட்வேர் நிறுவனர் சரவணமுத்து கலந்து கொண்டார். அவருக்கு தொழில் முனைவோரும் காமராஜ் இண்டர்நேஷனல் அகாடமி (சி.பி.எஸ்.இ) பள்ளி செயலாளருமான கண்ணப்பன் நினைவு பரிசு வழங்கினார்.

கூட்டத்தில் பங்கேற்ற சிறுதொழில் முனைவோர் கண்ணப்பன், தங்கராஜ், சிவக்குமார், தினேஷ் உள்ளிட்டோர் தங்கள் நிறுவன செயல்பாடுகள் பற்றி விளக்கினார்கள். கடந்த வாரம் `ஸ்பாட் லைட் ;நிகழ்ச்சியை நடத்திய கைரா டெக்னாலஜிஸ் நிறுவனத்துக்கு சிறப்பு விருந்தினர் சரவணமுத்து விருது வழங்கினார்.



கூட்டத்தில் மித்ரா சாப்ட்வேர் நிறுவனர் சரவணமுத்து பேசியதாவது:-
நான் கோவில்பட்டியில் பிறந்து வளர்ந்தவன். இங்கேயே படித்து முன்னேறியவன், வ.உ,.சி.பள்ளியில் பிளஸ்-2 வரை படித்தேன். நன்றாக படிப்பேன். இதனால் என்னிடம் ஆசிரியர்கள், பயாலஜி, சுவாலாஜி நல்ல மார்க் உனக்கு கிடைக்கும்.எனவே நீ எம்.பி.பி.எஸ். படித்து டாக்டர் ஆகிவிடு என்றார்கள். அபோதெல்லாம் நீட் கிடையாது,
ஆனால் எனக்கு படிக்கும்போதே சாப்ட்வேர் என்ஜீனியர் ஆகவேண்டும் என்பது குறிக்கோளாக இருந்தது. அதை ஆசிரியர்களிடம் சொல்லிவிட்டேன். பொது தேர்விலும் நல்ல மதிப்பெண் பெற்றேன், கோவில்பட்டி நேஷனல் என்ஜினீயரிங் கல்லூரியில் கம்ப்யூட்டர் சயின்ஸ் குரூப் இருந்ததால் இங்கு சேர்ந்து படித்தேன்,
2010-ம் ஆண்டு நான் தொழில் தொடங்கியபோது எந்த பின்னணியும் இல்லாமல் ஒரு சிறிய தொழில் முனைவோராக ஒரு நிறுவனத்தை ஆரம்பித்தேன். ஆனால் இதில் வெற்றியடைய வேண்டும் என்ற லட்சியம் இருந்தது. அதை முன்னிலைப்படுத்தி திட்டமிட்டு செயலாற்றினேன், எனது லட்சியத்தை இடைவிடாமல் செயல்படுத்த மனவுறுதி கொண்டு உழைத்தேன்,
இன்று கோவில்பட்டியை தலைநகரமாக கொண்டு, கோவை,மதுரையில் கிளை நிறுவனம் தொடங்கி நடத்தி வருகிறேன். அமெரிக்காவில் சேல்ஸ் சென்டர் மட்டும் வைத்து உள்ளேன்., எனது நிறுவனங்களில் வேளையில் சேருபவர்களுக்கு முதலில் நல்ல பயிற்சி கொடுத்து அவர்களை தயார்படுத்துகிறேன், ,
எனது நிறுவனத்தில் கைதேர்ந்த அனுபவம் வாய்ந்த ஊழியர்களின் மாத வருமானம் 1,50,000 முதல் ரூ,.2 லட்சமாக இருக்கிறது.ஒவ்வொருவரும் தொழிலில் முன்னேற்றம் அடைய திட்டமிடல் அவசியமாகும். பணம் சம்பாதிக்கும் வேளையில் அதில் சுயதிருப்தி இருந்தால் எல்லோராலும் சாதிக்கலாம்.
இன்றைக்கு எனக்கு நிறுவனத்தில் ப்ராஜெக்ட் ஒன்றுமே இல்லை என்ற நிலை வந்தாலும் அடுத்த 3 மாதத்தில் 30 சதவீத முன்னேற்றத்தை கொண்டுவர முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது. அப்படி இருந்தால் முயல் வேகத்தில் ஓட முடியும். நிதிமேலாண்மை எவ்வளவு முக்கியமோ அதைப்போல விற்பனை திறமையும் முக்கியமானதாகும். ஒவ்வொரு தொழில் முனைவோரும் இதை மனதில் கொண்டு செயலாற்றினால் சாதிக்கலாம், முயல் வேகத்தில் ஓடலாம்.
இவ்வாறு சரவணமுத்து பேசினார்.
