• June 8, 2025

ஐ. ஏ. எஸ். அதிகாரிகள் அதிரடி மாற்றம் : தூத்துக்குடி புதிய ஆட்சியர் ராகுல்நாத்

 ஐ. ஏ. எஸ். அதிகாரிகள் அதிரடி மாற்றம் : தூத்துக்குடி புதிய ஆட்சியர் ராகுல்நாத்

தமிழ்நாட்டில் பல்வேறு ஐ. ஏ. எஸ். அதிகாரிகள் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.

இதுதொடர்பாக தலைமைச் செயலாளர் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,கூறப்பட்டு இருப்பதாவது :-
நாகை மாவட்ட ஆட்சியராக இருக்கும் அருண் தம்புராஜ், கடலூர் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார். கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியராக இருக்கும் தீபக் ஜேக்கப், தஞ்சை மாவட்ட ஆட்சியராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் ஜான் வர்கீஸ் நாகை மாவட்ட ஆட்சியராக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

வணிக வரித்துறை நிர்வாகம் இணை ஆணையராக இருந்த சங்கீதா மதுரை மாவட்ட ஆட்சியராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியராக கமல் கிஷோர் நியமிக்கப்பட்டுள்ளார். நகராட்சி நிர்வாக இணை ஆணையராக இருக்கும் விஷ்ணு சந்திரன் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
சென்னை குடிநீர் வழங்கல், கழிவுநீரகற்று வாரிய நிர்வாக இயக்குனர் ராஜ கோபால் சுங்கரா, ஈரோடு மாவட்ட ஆட்சியராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியராக இருக்கும் செந்தில்ராஜ், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளராக சண்முக சுந்தரத்துக்கு பதிலாக நியமிக்கப்பட்டு இருக்கிறார்.

சேலம் மாநகராட்சி ஆணையராக இருந்த கிறிஸ்துராஜ், திருப்பூர் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாடு பால் உற்பத்திக் கழக நிர்வாக இணை இயக்குனர் சரயு, கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியராக எம்.என்.பூங்கொடி நியமிக்கப்பட்டுள்ளார். சிவகங்கை மாவட்ட ஆட்சியராக ஆஷா அஜித் நியமிக்கப்பட்டுள்ளார். அரியலூர் மாவட்ட ஆட்சியராக ஆனிமேரி ஸ்வர்னா, புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியராக மெர்சி ரம்யா, நாமக்கல் மாவட்ட ஆட்சியராக உமா, காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியராக கலைச்செல்வி மோகன் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *