• June 7, 2025

Month: May 2023

தூத்துக்குடி

எரிபொருள் சிக்கனத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு நடை பயணம்

தூத்துக்குடியில் மத்திய பெட்ரோலியத் துறை  அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் பெட்ரோலிய பயன்பாடு மற்றும் ஆராய்ச்சி கழகம்  மற்றும் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன்  இணைந்து சக்க்ஷம் 23 என்ற பெயரில் எரிபொருள் சிக்கனத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு நடை பயணம் நடைபெற்றது தூத்துக்குடி துறைமுக சாலையில் இருந்துதொடங்கிய  நடைபயனத்தை இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் மேலாளர் ஸ்ரீநாத் கோபிநாத் துவக்கி வைத்தார் நிகழ்ச்சியில் துணைமேலாளர் கோபாலம் வானம்பள்ளி செந்தில் முருகன் ஏஜென்சி ராஜு வ் மோகன்ராஜ் மற்றும் ஏராளமான பெட்ரோலிய […]

கோவில்பட்டி

இது நம்ம பள்ளி: கோவில்பட்டி காமராஜ் இன்டர்நேஷனல் அகாடமியில் (சி.பி.எஸ்.இ) மாணவர் சேர்க்கை

கோவில்பட்டி நகரில் மக்களின் அபிமானம் பெற்ற  இது நம்ம பள்ளியாக விளங்கும்  காமராஜ் இன்டர்நேஷனல் அகாடமி சீனியர் செகண்டரி ஸ்கூல் (CBSE) விளங்குகிறது, பசுவந்தனை சாலையில் பாண்டவர்மங்கலத்தில் இந்த பள்ளிக்கூடம் உள்ளது. எந்த பயணம் ஆனாலும் முதல்படி என்பது  மிகவும் முக்கியம். அதை சரியான முறையில் கடந்தால் தான் அடுத்தடுத்து தடைஇன்றி பயணம் செய்யமுடியும்.அந்த வகையில் உலகத்தரம் வாய்ந்த கட்டமைப்பு வசதிகளுடன் அமைந்துள்ள இந்த பள்ளிக்கூட வகுப்பறைகள் அனைத்தும் குளிர்சாதன வசதி கொண்டதாகும். மாணவர் திறமைகள் வளர்க்க […]

செய்திகள்

பிளஸ்-2 தேர்வில் 600-க்கு 600 மார்க் வாங்கிய திண்டுக்கல் மாணவி; பாராட்டுகள் குவிகின்றன

பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் இன்று வெளியிட்டார். தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வில் 94.03% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதிகளவில் தேர்ச்சி பெற்ற மாவட்டங்களில் விருதுநகர் முதலிடம் பெற்றுள்ளது. மாணவர்கள் 91.45% தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவிகள் 96.38% தேர்ச்சி பெற்றுள்ளனர். வழக்கம்போல மாணவர்களை விட மாணவிகளே அதிகளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களை விட மாணவிகள் 4.93% அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழகத்தில் 326 அரசு […]

செய்திகள்

மதுரை பொதுக்கூட்டத்தில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பெயர் நீக்கம்; கட்சியில் சலசலப்பு

தமிழகத்தில் தி.மு.க. அரசு, ஆட்சி பொறுப்பேற்று நேற்றுடன் 2 ஆண்டுகள் நிறைவடைந்தது. அதையொட்டி, தமிழகம் முழுவதும் ஆயிரத்து 222 இடங்களில் திமுக அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. மதுரையின் சிம்மக்கல் பகுதியில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் அந்த மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் சிறப்பு பேச்சாளராக பங்கேற்பார் என்று கடந்த 3ம் தேதி அறிவிப்பு வெளியானது.  மதுரை பொதுக் கூட்டத்தில் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பங்கேற்பார் என கூறியிருந்த நிலையில் […]

தூத்துக்குடி

பிளஸ்-2 தேர்வில் தோல்வி அடைந்தவர்களை பெற்றோர் கண்டிக்கவேண்டாம்; காவல் கண்காணிப்பாளர் வேண்டுகோள்

தமிழ்நாட்டில் இன்று பிளஸ்-2 தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியானது. தேர்வில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு தூத்துக்குடி  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி வாழ்த்துகள் தெரிவித்து உள்ள்ளார். அதே சமயம் தோல்வி அடைந்தவர்களை பெற்றோர்கள் கண்டிக வேண்ட்டாம் என்று வேண்டுகோள் விடுத்து இருக்கிறார். இது தொடர்பாக அவர் கூறி இருப்பதாவது:- பிளஸ்-2 தேர்வில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகள் இதனை தொடர்ந்து மென்மேலும் சிறப்பாக படித்து வாழ்க்கையில் பல வெற்றிகளை பெற வாழ்த்துகிறேன். இத்தேர்வில் தோல்வியடைந்த […]

தூத்துக்குடி

இரவு ரோந்து பணி : போலீஸ் சூப்பிரண்டு திடீர் ஆய்வு

தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நேற்று இரவு முழுவதும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் பாலாஜி சரவணன், போலீசாரின் இரவு ரோந்து பணியை திடீரென பாதுகாப்பு ஆய்வு செய்தார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் நேற்று இரவு முழுவதும் ஆத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளான தலைவன்வடலி சந்திப்பு, தலைவன் வடலி சேதுராஜா தெரு, ஆவரையூர் மற்றும் நரசன்விளை உட்பட பல்வேறு பகுதிகளுக்கு ரோந்து சென்று திருச்செந்தூர் காவல் துணை கண்காணிப்பாளர் […]

கோவில்பட்டி

கோடைகால இலவச ஆக்கி, கால்பந்து பயிற்சி முகாம் நிறைவு

கோவில்பட்டியில் ஹோலி ட்ரினிட்டி சிபிஎஸ்சி பள்ளியில் கோடைகால இலவச சிறப்பு ஆக்கி மற்றும் கால்பந்து பயிற்சி முகாம் ஏப்ரல் 21 ஆம் தேதி முதல் மே 6 வரை பள்ளி மைதானத்தில் நடைபெற்றது பயிற்சி முகாமின் நிறைவு நாளன்று பயிற்சி முகாமில் கலந்து கொண்ட வீரர் வீராங்கனைகளுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது .இந்த விழாவிற்கு பள்ளியின் தாளாளர் மோசஸ் தலைமை தாங்கினார். பள்ளியின் முதல்வர் ஷகீலா ராணி அனைவரையும் வரவேற்றார்.சிறப்பு விருந்தினராக ஆக்கி யூனிட் ஆப் தூத்துக்குடி செயலாளர் […]

கோவில்பட்டி

கோவில்பட்டி புனித  சூசையப்பர் திருத்தல திருவிழா: மும்மதத்தினர் நடத்திய கூட்டு ஜெபம்

கோவில்பட்டி புனித  சூசையப்பர் திருத்தல திருவிழா 28-4-2023 அன்று கொடியேற்றத்துடன் தொடங்கி தினமும் திருப்பலி,இறை கலைநிகழ்ச்சிகளுடன் நடந்து கொண்டிருக்கிறது.9-ம் நாளான நேற்று மாலை 6 மணிக்கு திருத்தலத்தில் பாளை மறைமாவட்ட முதன்மை குரு குழந்தைராஜ் அடிகளார்,திட்ட அலுவலர் அருட்திரு தீபக் மைக்கேல் ராஜா அடிகளார், திருத்தல பங்கு தந்தை அருட்திரு அலோசியஸ் துரைராஜ் அடிகளார்,உதவி பங்கு தந்தை மிகேல் மகேஷ் அடிகளார் இணைந்து திருப்பலி நிறைவேற்றினார்கள் பின்னர் திருச்சபை ஐக்கிய பாஸ்டர்கள்,போதகர்கள், இந்து சமய சகோதரர்கள், பெரிய […]

கோவில்பட்டி

கடன் கொடுக்க லஞ்சம் கேட்பதாக புகார்: தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம்

கோவில்பட்டி அருகே வரதம்பட்டியில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் செயல்பட்டு வருகிறது. இந்த சங்கத்தின் தலைவராக முருகேசன் உள்ளார்.செயல் அலுவலராக வீரப்பன் செயல்பட்டு வருகிறார்.இந்த சங்கத்தினை வரதம்பட்டி, உருளைகுடி, பீக்கிலிபட்டி, பனைப்பட்டி, அய்யாக்கோட்டையூர், வெங்கடசலாபுரம், மீனாட்சிபுரம், காட்டுராமன்பட்டி ஆகிய கிராமங்களை சேர்ந்த பயன்படுத்தி வருகின்றனர்.தற்போது கால்நடை வளர்ப்பவர்களுக்கு கால்நடை மூலதன கடன் வழங்கப்பட்டு வருகிறது.இதற்கு அக்கிராமத்தினை சேர்ந்த கால்நடை வளர்க்க கூடியவர்கள் பலரும் விண்ணப்பம் செய்துள்ளனர்.தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் தலைவர் மற்றும் செயலாளர் […]

கோவில்பட்டி

இந்திய கம்யூனிஸ்ட் நடைபயண பிரசாரம்

பி.ஜே.பி அரசைக் கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாற்றத்தை நோக்கி.. நடைபயண பிரசாரம் கோவில்பட்டி தாமஸ் நகர் பகுதியில் நடைபெற்றது ‌நடைபயண பிரச்சாரத்திற்கு தாலுகா செயலாளர் பாபு தலைமை வகித்தார். இந்நிகழ்வில் மாவட்ட நிர்வாகக் குழு உறுப்பினர் சேதுராமலிங்கம், தாலுகா உதவிச் செயலாளர் ராமகிருஷ்ணன், கிளைச் செயலாளர் ரஞ்சிதம், தாலுகாக் குழு உறுப்பினர் மணிகண்டன், சண்முகையா, பூரணம்மாள் காலணி கிளைச் செயலாளர் பொன்மணி உள்பட 20க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.