• June 7, 2025

பிளஸ்-2 தேர்வில் தோல்வி அடைந்தவர்களை பெற்றோர் கண்டிக்கவேண்டாம்; காவல் கண்காணிப்பாளர் வேண்டுகோள்

 பிளஸ்-2 தேர்வில் தோல்வி அடைந்தவர்களை பெற்றோர் கண்டிக்கவேண்டாம்; காவல் கண்காணிப்பாளர் வேண்டுகோள்

தமிழ்நாட்டில் இன்று பிளஸ்-2 தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியானது. தேர்வில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு தூத்துக்குடி  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி வாழ்த்துகள் தெரிவித்து உள்ள்ளார். அதே சமயம் தோல்வி அடைந்தவர்களை பெற்றோர்கள் கண்டிக வேண்ட்டாம் என்று வேண்டுகோள் விடுத்து இருக்கிறார்.

இது தொடர்பாக அவர் கூறி இருப்பதாவது:-

பிளஸ்-2 தேர்வில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகள் இதனை தொடர்ந்து மென்மேலும் சிறப்பாக படித்து வாழ்க்கையில் பல வெற்றிகளை பெற வாழ்த்துகிறேன். இத்தேர்வில் தோல்வியடைந்த மாணவ, மாணவிகளோ அல்லது குறைந்த மதிப்பெண் பெற்றவர்களோ தோல்வியைக் கண்டு வருந்த வேண்டாம்.

தேர்வு மட்டுமே நமது வாழ்க்கையல்ல. தோல்வியை அடுத்த முறை வெற்றிக்கான படிக்கட்டாக மாற்றுங்கள். தோல்விடைந்தவர்களுக்கு அடுத்து ஒரிரு மாதங்களில் மீண்டும் துணைத் தேர்வு நடைபெறும், அதில் பங்கேற்று வெற்றி பெறுவதற்கான முயற்சி செய்யுமாறும், தோல்வியடைந்தவர்களின் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை கண்டிக்க வேண்டாம்,

தேர்ச்சி பெற்ற மற்ற பிள்ளைகளோடு ஒப்பிட்டு, ஏற்கனவே பதற்றத்தில் உள்ள உங்கள் குழந்தைகளை புண்படுத்த வேண்டாம். நம் குழந்தைகள் நமக்கு மிக, மிக முக்கியம் என்பதை மனதில் வைத்துக்கொண்டு பெற்றோர்கள் தங்கள் பொன்னான நேரத்தை பிள்ளைகளின் அடுத்த கட்ட முன்னேற்றத்திற்கான சரியான பாதையை தேர்வு செய்வதில் செலவிட்டு, அவர்களை வழிநடத்தி வெற்றியாளர்களாக மாற்றுமாறு பெற்றோர்களை கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் கேட்டுக்கொண்டுள்ளார்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *