• June 7, 2025

இரவு ரோந்து பணி : போலீஸ் சூப்பிரண்டு திடீர் ஆய்வு

 இரவு ரோந்து பணி : போலீஸ் சூப்பிரண்டு திடீர் ஆய்வு

தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நேற்று இரவு முழுவதும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் பாலாஜி சரவணன், போலீசாரின் இரவு ரோந்து பணியை திடீரென பாதுகாப்பு ஆய்வு செய்தார்.

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் நேற்று இரவு முழுவதும் ஆத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளான தலைவன்வடலி சந்திப்பு, தலைவன் வடலி சேதுராஜா தெரு, ஆவரையூர் மற்றும் நரசன்விளை உட்பட பல்வேறு பகுதிகளுக்கு ரோந்து சென்று திருச்செந்தூர் காவல் துணை கண்காணிப்பாளர் வசந்தராஜ் மேற்பார்வையில் காவல் ஆய்வாளர்கள் தலைமையில் உதவி ஆய்வாளர்கள் உட்பட காவல்துறையினர் மேற்கொண்டுள்ள பாதுகாப்பு மற்றும் ரோந்துப்பணிகளை ஆய்வு செய்து அறிவுரைகள் வழங்கினார்.

இந்த ஆய்வின்போது திருச்செந்தூர் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் . வசந்தராஜ், காவல் ஆய்வாளர்கள் ஆத்தூர் காவல் நிலையம் . பாலமுருகன், கோவில்பட்டி கிழக்கு தlவனசுந்தர், உதவி ஆய்வாளர்கள் . சிவராஜா, செல்வக்குமார் மற்றும் தனிப்பிரிவு உதவ ஆய்வாளர் ரகு உட்பட காவல்துறையினர் உடனிருந்தனர்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *