கோடைகால இலவச ஆக்கி, கால்பந்து பயிற்சி முகாம் நிறைவு

கோவில்பட்டியில் ஹோலி ட்ரினிட்டி சிபிஎஸ்சி பள்ளியில் கோடைகால இலவச சிறப்பு ஆக்கி மற்றும் கால்பந்து பயிற்சி முகாம் ஏப்ரல் 21 ஆம் தேதி முதல் மே 6 வரை பள்ளி மைதானத்தில் நடைபெற்றது பயிற்சி முகாமின் நிறைவு நாளன்று பயிற்சி முகாமில் கலந்து கொண்ட வீரர் வீராங்கனைகளுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது .
இந்த விழாவிற்கு பள்ளியின் தாளாளர் மோசஸ் தலைமை தாங்கினார். பள்ளியின் முதல்வர் ஷகீலா ராணி அனைவரையும் வரவேற்றார்.
சிறப்பு விருந்தினராக ஆக்கி யூனிட் ஆப் தூத்துக்குடி செயலாளர் முனைவர் குரு சித்திர சண்முக பாரதி கலந்துகொண்டு முகாமில் கலந்து கொண்ட 60 க்கும் மேற்பட்ட வீரர் வீராங்கனைகளுக்கு சான்றிதழ் வழங்கி வாழ்த்தினார்.
ஆக்கி பயிற்சியாளர்கள் சீனிவாசன், சுரேஷ்குமார் தலைமை கால்பந்து பயிற்சியாளர்கள் மகேஷ், சுகி ரொனால்ட் ரீகன் ஆகியோருக்கு நினைவுப் பரிசு வழங்கி கவுரவிக்கப்பட்டது.
இறுதியில் பள்ளியின் உடற்கல்வி இயக்குனர் முனைவர் சீனிவாசன் நன்றி உரையாற்றினார்
