• June 7, 2025

கோவில்பட்டி புனித  சூசையப்பர் திருத்தல திருவிழா: மும்மதத்தினர் நடத்திய கூட்டு ஜெபம்

 கோவில்பட்டி புனித  சூசையப்பர் திருத்தல திருவிழா: மும்மதத்தினர் நடத்திய கூட்டு ஜெபம்

கோவில்பட்டி புனித  சூசையப்பர் திருத்தல திருவிழா 28-4-2023 அன்று கொடியேற்றத்துடன் தொடங்கி தினமும் திருப்பலி,இறை கலைநிகழ்ச்சிகளுடன் நடந்து கொண்டிருக்கிறது.
9-ம் நாளான நேற்று மாலை 6 மணிக்கு திருத்தலத்தில் பாளை மறைமாவட்ட முதன்மை குரு குழந்தைராஜ் அடிகளார்,திட்ட அலுவலர் அருட்திரு தீபக் மைக்கேல் ராஜா அடிகளார், திருத்தல பங்கு தந்தை அருட்திரு அலோசியஸ் துரைராஜ் அடிகளார்,உதவி பங்கு தந்தை மிகேல் மகேஷ் அடிகளார் இணைந்து திருப்பலி நிறைவேற்றினார்கள்


பின்னர் திருச்சபை ஐக்கிய பாஸ்டர்கள்,போதகர்கள், இந்து சமய சகோதரர்கள், பெரிய பள்ளிவாசல் அஸ்ரத் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக அழைக்கப்பட்டிருந்தனர்
இம்மும்மதத்தினரும் இணைந்து கூட்டு ஜெபம் செப்தனர் . பங்கு தந்தையின் அழைப்பை  ஏற்று வந்திருந்த  சிறப்பு அழைப்பாளர்கள் அனைவருக்கும் பங்கு தந்தை பொன்னாடை அணிவித்து கவுரவ படுத்தினார்கள்.
பின்னர் திருத்தலத்தில் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் சூசையப்பர், இறை மகன் இயேசுவின் சொரூபம் வைக்கப்பட்ட பவனியை மும்மதத்தினரும் இணைந்து தொடங்கி வைத்தனர் பவனியானது இறைமக்கள் ஜெபம் செய்தவாறு  மார்க்கெட் ரோடு,மாதாங்கோவில்ரோடு,எட்டையாபுரம் ரோடு, புதுரோடு , புனித  சூசையப்பர் திருத்தல திருவிழா ரோடு வழியாக திருத்தலம் வந்து சேர்ந்தது இப் பவனியில் அருட் சகோதரிகள் மற்றும் ஏராளமான இறைமக்கள் கலந்து கொண்டனர்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *