கடன் கொடுக்க லஞ்சம் கேட்பதாக புகார்: தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் முற்றுகை

கோவில்பட்டி அருகே வரதம்பட்டியில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் செயல்பட்டு வருகிறது. இந்த சங்கத்தின் தலைவராக முருகேசன் உள்ளார்.செயல் அலுவலராக வீரப்பன் செயல்பட்டு வருகிறார்.
இந்த சங்கத்தினை வரதம்பட்டி, உருளைகுடி, பீக்கிலிபட்டி, பனைப்பட்டி, அய்யாக்கோட்டையூர், வெங்கடசலாபுரம், மீனாட்சிபுரம், காட்டுராமன்பட்டி ஆகிய கிராமங்களை சேர்ந்த பயன்படுத்தி வருகின்றனர்.தற்போது கால்நடை வளர்ப்பவர்களுக்கு கால்நடை மூலதன கடன் வழங்கப்பட்டு வருகிறது.இதற்கு அக்கிராமத்தினை சேர்ந்த கால்நடை வளர்க்க கூடியவர்கள் பலரும் விண்ணப்பம் செய்துள்ளனர்.
தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் தலைவர் மற்றும் செயலாளர் வீரப்பன் ஆகியோர் தங்களுக்கு வேண்டியவர்களுக்கு மட்டும் கடன் தருவதாகவும், மேலும் கடன் தர ரூ.5 ஆயிரம் லஞ்சம் கேட்பதாக குற்றம் சாட்டி, அப்பகுதியை சேர்;ந்த கால்நடை வளர்ப்பவர்கள், மேலும் கடன் கேட்டு விண்ணப்பம் செய்தவர்கள் வரதம்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தினை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இப்பிரச்சினை குறித்து வரதம்பட்டியில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் செயலாளர் வீரப்பனிடம் கேட்ட போது அவர் கூறியதாவது :-
ஏற்கனவே கடன் பெற்று கட்டியவர்களுக்கு முதலில் கடன் வழங்க வேண்டும் என்று முடிவு செய்து 44 பேருக்கு வழங்கவுள்ளதாகவும், தங்களுக்கு 65லட்ச ரூபாய் தான் கடன் தொகை கொடுக்க முடியும், புதியதாக விண்ணப்பம் செய்தவர்களுக்கு கடன் கொடுக்க கூடுதல் தொகை கேட்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கடிதம் எழுதி பெற இருப்பதாகவும், கூடுதல் தொகை வந்ததும் புதியதாக விண்ணப்பம் செய்தவர்களுக்கு கடன் வழங்கப்படும் என்றும், 5 ஆயிர ரூபாய் லஞ்சம் கேட்டதாக கூறுவது தவறான தகவல்
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
