எரிபொருள் சிக்கனத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு நடை பயணம்

தூத்துக்குடியில் மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் பெட்ரோலிய பயன்பாடு மற்றும் ஆராய்ச்சி கழகம் மற்றும் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் இணைந்து சக்க்ஷம் 23 என்ற பெயரில் எரிபொருள் சிக்கனத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு நடை பயணம் நடைபெற்றது
தூத்துக்குடி துறைமுக சாலையில் இருந்துதொடங்கிய நடைபயனத்தை இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் மேலாளர் ஸ்ரீநாத் கோபிநாத் துவக்கி வைத்தார் நிகழ்ச்சியில் துணைமேலாளர் கோபாலம் வானம்பள்ளி செந்தில் முருகன் ஏஜென்சி ராஜு வ் மோகன்ராஜ் மற்றும் ஏராளமான பெட்ரோலிய நிறுவன ஊழியர்கள் இந்த நடை பயணத்தில் கலந்து கொண்டனர் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியபடி ஏராளமானோர் கலந்து கொண்ட இந்த விழிப்புணர்வு நடை பயணம் தூத்துக்குடி திருச்செந்தூர் சாலையில் செந்தில் முருகன் ஏஜென்சியில் நிறைவடைந்தது
