,உலகம் முழுவதும் இன்று (19-ந்தேதி) உலக கல்லீரல் தினம் அனுசரிக்கப்படுகிறது. கல்லீரல் தினத்தை முன்னிட்டு பொதுமக்களிடம் கல்லீரல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், கோவில்பட்டி மாவட்ட அரசு மருத்துவமனை சித்த மருத்துவு பிரிவு சார்பில் சிறப்பு விழிப்புணர்வு முகாமுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. டாக்டர் அபிநயா தலைமையில், மருந்தாளுனர் முத்துலட்சுமி உதவியுடன், படங்களை கொண்டு கருத்தரங்கு மற்றும் விழிப்புணர்வு முகாம் நடந்தது, இதில் .பொது மக்கள் பங்கேற்றனர். உலகில் பலகோடி மக்கள் கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டு உள்ளனர். […]
கோடைக்காலம் தொடங்கியதில் இருந்து கோவில்பட்டியில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. ஆரம்பத்தில் 96 டிகிரி பாரன்ஹீட்டாக இருந்த வெயில் அளவு 98 டிகிரியாக உயர்ந்தது. வெப்ப காற்று வீசியதால் பகல் நேரத்தில் மக்கள் வெளியே வரவே பயந்தனர், வெப்பத்தை தணிக்கும் வகையில் நகரில் ஆங்காங்கே இளநீர் கடைகள், மோர், பதநீர், நொங்கு, குளிர்பான கடைகள் தோன்றின. மக்கள் அவற்றை அருந்தி வெப்பத்தினால் ஏற்படும் தாகத்தை ஓரளவு தணித்துகொண்டனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக வெயில் அளவு […]
கோவில்பட்டி அரசு மருத்துமனையில் கட்டண படுக்கைகள் அமைக்கப்படும்; அமைச்சர் மா.சுப்பிரமனியன் அறிவிப்பு
தமிழக சட்டசபையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை தொடர்பான மானிய கோரிக்கை மீது எம்.எல்.ஏ.க்கள் இன்று விவாதித்தனர். அவர்களுக்கு பதில் அளித்து பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன் தனது துறைக்கான புதிய 106 அறிவிப்புகளை வெளியிட்டார். அதன் விவரம் வருமாறு:- சென்னை எழும்பூர்-மண்டல கண் மருத்துவவியல் நிலையத்திற்கு நவீன மருத்துவ உபகரணங்கள் வழங்கப்படும். * நெல்லை, தஞ்சை, கன்னியாகுமரி, புதுக்கோட்டை, தர்மபுரி, திருவண்ணாமலை மற்றும் விழுப்புரம் ஆகிய 7 அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகள் மற்றும் பொள்ளாச்சி, கடலூர், […]
கர்நாடகத்தில் மே மாதம் 10-ந் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலையொட்டி தேர்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. கர்நாடகாவில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இந்தநிலையில், கர்நாடக மாநிலம் புலிகேசி நகர் சட்டமன்றதொகுதியில் அ.தி.மு.க. போட்டியிடுவதாக கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். கர்நாடக மாநில அ.தி.மு.க. அவைத்தலைவரான அன்பரசனை வேட்பாளராக தேர்வு செய்து எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். அ.தி.மு.க. ஆட்சிமன்றக்குழு பரிசீலித்து எடுத்த முடிவின்படி கர்நாடகாவில் ஒரு தொகுதியில் போட்டியிடுகிறோம். பெங்களூரு அருகே உள்ள புலிகேசி […]
30-ந் தேதிக்குள் சொத்துவரி செலுத்தினால் 5 சதவீதம் ஊக்கத்தொகை; தூத்துக்குடி மாநகராட்சி அதிரடி
வழக்கமாக சொத்து வரி செலுத்துவபவர்கள் தொடர்ச்சியாக செலுத்தாமல் பாக்கி வைப்பது வழக்கம். பின்னர் அபராதத்துடன் செலுத்துவார்கள். சொத்து வரி வசூல் தாமதம் காரணமாக அதிக அளவில் அரசுக்கு வருமானம் பாதிக்கப்படுகிறது.\ இதன் காரணமாக தூத்துக்குடி மாநகராட்சி நிர்வாகம் ஒரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.. மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய 2023-24ஆண்டின் முதல் அரையாண்டிற்கான சொத்துவரியை ஏப்ரல் 30ஆம் தேதிக்குள் செலுத்தினால் 5 சதவீத ஊக்கத்தொகை பெறலாம். எனவே சொத்து உரிமையாளர்கள் தங்களது சொத்துவரியை ஏப்ரல் 30 தேதிக்குள் செலுத்தி […]
தொழில் நகரமான கோவில்பட்டியில் நாளுக்கு நாள் ஆக்கிரமிப்புகள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. நகரின் ஒரு இடத்தை கூட மிச்சம் வைக்காமல் அத்தனை இடத்திலும் ஆக்கிரம்புகள் பெருகி உள்ளன, கோவில்பட்டி பசுவந்தனை சாலை மாநில நெடுஞ்சாலைத்துறையாக தரம் உயர்த்தப்பட்டதையடுத்து தற்போது 10.5 மீட்டர் அகலத்தில் உள்ள இச்சாலை 14 மீட்டர் அகலத்தில் விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. இதையடுத்து பசுவந்தனை சாலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக இன்று நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் […]
தமிழ்நாடு காவல்துறையில் பெண்கள் பணிக்குச் சேர்ந்து 50 வருடங்கள் நிறைவடைந்த நிலையில் பொன் விழா கொண்டாடும் வகையில் திருநெல்வேலி சரகத்தில் பணிபுரியும் பெண் காவல்துறையினர் மற்றும் .காவல்துறை உயர் அதிகாரிகளுக்கான துப்பாக்கி சுடும் போட்டி 2 நாட்கள் நடத்தப்பட்ட்டது.’ தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு துப்பாக்கி சுடுதளத்தில் திருநெல்வேலி சரக காவல்துறை துணை தலைவர் பிரவேஷ் குமார் தலைமையில் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன் முன்னிலையில் நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்டம், திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி, […]
தொழில் முனைவோர் அனைவருக்கும் வரப்பிரசாதமாய் கோவில்பட்டி ஜே.சி.ஐ. கொண்டு வந்துள்ள வணிக அமைப்பான ஜே.காம் கோவில்பட்டி 1.0 முதல் மாதிரி சந்திப்பு கூட்டம் இன்று காலை நடைபெற்றது. எட்டயபுரம் ரோட்டில் உள்ள தென் இந்திய தீப்பெட்டி தயாரிப்பாளர்கள் சங்க கட்டிடத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக ஆசியாபார்ம் பாபு கலந்து கொண்டு பேசினார். கோவில்பட்டி ஜே.காம் சேர்மன் ஐ.அருண்பிரசாத் தலைமை தாங்கினார். , துணை சேர்மன் சுரேந்திரன், செயலாளர் நவீன் விக்னேஷ், பொருளாளர் முரளி கிருஷ்ணன், […]
கோவில்பட்டி நகரின் மையப்பகுதியில் பல ஆண்டுகளாக செய்லபட்டு வந்த நகராட்சி தினசரி மார்க்கெட்டில் .மொத்தம் மற்றும் சில்லறை காய்கறி கடைகள். பழக்கடைகள், மளிகை கடைகள் மற்றும் பல்வேறு கடைகள் வந்தன, மொத்தம் 396 கடைகளில் 360 கடைகள் இயங்கி வந்தன. இந்த நிலையில் 3 மாதங்களுக்கு முன்பு கோவில்பட்டி நகராட்சிக்கு சொந்தமான இந்த தினசரி மார்க்கெட்டில் கடைகளை இடித்து விட்டு 6.87 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 250 கடைகள் கொண்ட தினசரி சந்தை கட்டுவதற்கு நகராட்சி நிர்வாகம் […]
கோவில்பட்டி இல்லத்தார் நடுநிலைப்பள்ளியில் 8-ம்வகுப்பு மாணவர்களுக்கு தேசிய திறனாய்வு தேர்வு நடந்தது.. இதில் இந்த பள்ளியை சேர்ந்த 6 மாணவ,மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். அவர்களுக்கு 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு முடிய மாதம் 1000 ரூபாய் வீதம் நான்கு வருடங்களுக்கு கல்வி உதவித்தொகை அரசால் வழங்கப்படும் என்று பள்ளிக்கூட நிர்வாகம் தெரிவித்து உள்ளது. இந்த மாணவர்களுக்கு பயிற்சி அளித்த ஆசிரியர்கள் ராஜேசுவரி, மாரியம்மாள், கலைச்செல்வி ஆகியோரை பள்ளி செயலர் சோ.சங்கரன் பரிசு வழங்கி பாராட்டினார். மேலும் […]