30-ந் தேதிக்குள் சொத்துவரி செலுத்தினால் 5 சதவீதம் ஊக்கத்தொகை; தூத்துக்குடி மாநகராட்சி அதிரடி அறிவிப்பு

வழக்கமாக சொத்து வரி செலுத்துவபவர்கள் தொடர்ச்சியாக செலுத்தாமல் பாக்கி வைப்பது வழக்கம். பின்னர் அபராதத்துடன் செலுத்துவார்கள். சொத்து வரி வசூல் தாமதம் காரணமாக அதிக அளவில் அரசுக்கு வருமானம் பாதிக்கப்படுகிறது.\
இதன் காரணமாக தூத்துக்குடி மாநகராட்சி நிர்வாகம் ஒரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது..
மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய 2023-24ஆண்டின் முதல் அரையாண்டிற்கான சொத்துவரியை ஏப்ரல் 30ஆம் தேதிக்குள் செலுத்தினால் 5 சதவீத ஊக்கத்தொகை பெறலாம்.
எனவே சொத்து உரிமையாளர்கள் தங்களது சொத்துவரியை ஏப்ரல் 30 தேதிக்குள் செலுத்தி மாநகர் பகுதிகளில் மேற்கொள்ளப்படும் வளர்ச்சி பணிகளில் தங்களது பங்களிப்பினை வழங்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
