• June 7, 2025

கர்நாடக சட்டசபை தேர்தலில் ஒரு தொகுதியில் அ.தி.மு.க. போட்டி

 கர்நாடக சட்டசபை தேர்தலில் ஒரு தொகுதியில் அ.தி.மு.க. போட்டி

கர்நாடகத்தில் மே மாதம் 10-ந் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலையொட்டி தேர்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. கர்நாடகாவில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இந்தநிலையில், கர்நாடக மாநிலம் புலிகேசி நகர் சட்டமன்றதொகுதியில் அ.தி.மு.க. போட்டியிடுவதாக கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

கர்நாடக மாநில அ.தி.மு.க. அவைத்தலைவரான அன்பரசனை வேட்பாளராக தேர்வு செய்து எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

அ.தி.மு.க. ஆட்சிமன்றக்குழு பரிசீலித்து எடுத்த முடிவின்படி கர்நாடகாவில் ஒரு தொகுதியில் போட்டியிடுகிறோம். பெங்களூரு அருகே உள்ள புலிகேசி நகர் தொகுதியில் கர்நாடக மாநில அ.தி.மு.க. தலைவர் அன்பரசன் போட்டியிடுகிறார் என்று எடப்பாடி பழனிசாமி அறிக்கையில் கூறி இருக்கிறார்.. பா.ஜ.க. கூட்டணியில் போட்டியிட வாய்ப்பு தராத நிலையில் வேட்பாளரை அ.தி.மு.க..அறிவித்து இருப்பதாக கூறப்படுகிறது.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *