கோவில்பட்டி ஜே.காம் சார்பில் தொழில் முனைவோர் சந்திப்பு கூட்டம்

தொழில் முனைவோர் அனைவருக்கும் வரப்பிரசாதமாய் கோவில்பட்டி ஜே.சி.ஐ. கொண்டு வந்துள்ள வணிக அமைப்பான ஜே.காம் கோவில்பட்டி 1.0 முதல் மாதிரி சந்திப்பு கூட்டம் இன்று காலை நடைபெற்றது. எட்டயபுரம் ரோட்டில் உள்ள தென் இந்திய தீப்பெட்டி தயாரிப்பாளர்கள் சங்க கட்டிடத்தில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக ஆசியாபார்ம் பாபு கலந்து கொண்டு பேசினார். கோவில்பட்டி ஜே.காம் சேர்மன் ஐ.அருண்பிரசாத் தலைமை தாங்கினார். , துணை சேர்மன் சுரேந்திரன், செயலாளர் நவீன் விக்னேஷ், பொருளாளர் முரளி கிருஷ்ணன், பயிற்சியாளர் மாரியப்பன், கோவில்பட்டி ஜே.சி.ஐ.சேர்மன் டி.தீபன்ராஜ், முன்னாள் சேர்மன் என்.ராஜவேலு உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் தொழில் முனைவோர் சார்பில் நேஷனல் டிரேடர்ஸ் சுந்தர்ராஜன், பிரண்ட் பேஜ் கார்மெண்ட்ஸ் முருகன், கணேஷ் பேக்கரி அஜய் கணேஷ், ரியல் எஸ்டேட் டெவலப்பர் சிவகுமார், சாய் மோட்டார்ஸ் தங்கராஜ், பிசியோ சென்டர் உதயாஸ்ரீ ,ஹைடெக் பார்லர் அனிதா, போட்டோகிராபி ஆண்டனி, லைட் வேர்ல்ட் தினேஷ் பாபு , வெல்நெஸ் சென்டர் நடராஜன்-மகேஸ்வரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.




தொழில் முனைவோர் அனைவரும் தங்கள் தொழில் பற்றிய விவரங்களை கூட்டத்தில் தெரிவித்தனர். ,மேலும் தங்களின் தேவைகளையும் வலியுறுத்தினார்கள். இவர்களில் பெரும்பாலோருக்கு இந்த கூட்டத்திலேயே வர்த்தக தொடர்பு கிடைத்தது.
ஜே.காம்.சேர்மன் ஐ,அருண்பிரசாத் பேசுகையில் “ஜே.காமின் முக்கிய நோக்கம் 100 சதவீத வர்த்தகம் 100 சதவீத வளர்ச்சி என்பது தான். அடுத்த கூட்டத்தில் தொழில் முனைவோர் தங்கள் தயாரிப்புகளை கொண்டு வந்து பார்வைக்கு வைக்க வேண்டும். கோவில்பட்டி ஜே.காம். சார்பில் ஒரு செயலி உருவாக்கப்பட இருக்கிறது.. அதில் உறுப்பினர்களின் தொழில்கள் பற்றிய விவரங்கள் இடம் பெறும்” என்று தெரிவித்தார்.
