தேசிய திறனாய்வு தேர்வில் தேர்ச்சி பெற்ற கோவில்பட்டி மாணவர்கள் 6 பேருக்கு அரசின் கல்வி உதவித்தொகை
கோவில்பட்டி இல்லத்தார் நடுநிலைப்பள்ளியில் 8-ம்வகுப்பு மாணவர்களுக்கு தேசிய திறனாய்வு தேர்வு நடந்தது.. இதில் இந்த பள்ளியை சேர்ந்த 6 மாணவ,மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
அவர்களுக்கு 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு முடிய மாதம் 1000 ரூபாய் வீதம் நான்கு வருடங்களுக்கு கல்வி உதவித்தொகை அரசால் வழங்கப்படும் என்று பள்ளிக்கூட நிர்வாகம் தெரிவித்து உள்ளது.
இந்த மாணவர்களுக்கு பயிற்சி அளித்த ஆசிரியர்கள் ராஜேசுவரி, மாரியம்மாள், கலைச்செல்வி ஆகியோரை பள்ளி செயலர் சோ.சங்கரன் பரிசு வழங்கி பாராட்டினார். மேலும் அவர்களுக்கு உறுதுணையாக இருந்த தலைமை ஆசிரியை இசக்கியம்மாள், இடைநிலை ஆசிரியை நிர்மலா, உடற்கல்வி ஆசிரியர் ஜெயக்குமார், கணினி ஆசிரியை கவிதா ஆகியோருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.