கோவில்பட்டியில் இலவச பொது மருத்துவம்,கண் பரிசோதனை முகாம்
கோவில்பட்டி சங்கரலிங்கபுரம் சங்கரக்குமார் பள்ளியில் இலவச பொது மருத்துவம் ,கண் பரிசோதனை மற்றும் ரத்ததான முகாம் நடைபெற்றது நாடார் உறவின்முறை சங்கம் பொதுநல மருத்துவமனை, 3 வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் கருப்பசாமி என்ற ராசு மற்றும் அப்துல் கலாம் ரத்ததான கழகம் மற்றும் திருநெல்வேலி அகர்வால் கண் மருத்துவமனை ஆகியோர் இணைந்து இந்த மருத்துவ முகாமை நடத்தினர்.
இந்த முகாமிற்கு பொதுநல மருத்துவமனை செயலாளர் தங்கராஜ் தலைமை தாங்கினார், தலைவர் திலகரத்தினம் இந்த முகாமை தொடக்கி வைத்தார். முகாமில் ரத்தக் கொதிப்பு, சர்க்கரை நோய் ,இ.சி.சி., உடல் பருமனை கண்டறிதல் கண் பரிசோதனை உட்பட அனைத்து நோய்களுக்கும் இலவசமாக சிகிச்சை அளிக்கப்பட்டது
டாக்டர்கள் ஷோபனா ,வேலம்மாள் ராஜ்குமார் , செல்வராணி, கமலா சுதன் ,ஆகியோ சிகிச்சை அளித்தனர் அப்துல் கலாம் ரத்னா கழக நிறுவன தலைவர் ராஜேந்திரன் ,3 வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் கருப்பசாமி என்ற ராசு, நாடார் உரிமைச் சங்க பொது மருத்துவமனை உறுப்பினர் மாரிசாமி, மற்றும் ஆபிரகாம் அய்யாதுரை, சேதுரத்தினம் ,செல்வ மோகன், சத்தியமூர்த்தி உட்பட பலர் கலந்து கொண்டனர்