• April 27, 2024

கோவில்பட்டி அரசு மருத்துவமனை பெண் டாக்டர் தாக்கப்பட்டதாக புகார்

 கோவில்பட்டி அரசு மருத்துவமனை பெண் டாக்டர் தாக்கப்பட்டதாக புகார்

கோவில்பட்டி அரசு மருத்துவமனை எப்போதும் பரபரப்பாக இருக்கும். நேற்று இரவு 7 மணி அளவில் டாக்டர் சங்கீதா பணியில் இருந்தார். அப்போது 3 பெண்கள் சத்தமாக பேசிக்கொண்டு மற்றவர்களுக்கு இடையூறாக இருந்தனர்.

அவர்களிடம் டாக்டர் சங்கீதா, சத்தம் போடாதீர்கள் என்று கண்டித்தார். அப்போது அவர்கள் நாங்கள் சென்னையில் இருந்து வந்து இருக்கிறோம், தீவிர சிகிச்சை பிரிவில் இருக்கும் ஒருவரை பார்க்கவேண்டும் என்று கூறினார்கள்.

அதற்கு பார்வையாளர் நேரம் முடிந்து விட்டது என்று கூறி டாக்டர் அனுமதி மறுத்தார். இதனால் ஆத்திரம் அடைந்த அந்த பெண்களில் ஒருவர் கையில் வைத்திருந்த தொல் பையைக்கொண்டு தாக்கினார். இதை பார்த்த மருத்துவமனை ஊழியர்கள் தடுத்தனர், இருப்பினும் அந்த பெண் வேகமாக தாக்கினார்.

இதானால் வலியில் துடித்த டாக்டர் சங்கீதா, போலீசுக்கு புகார் செய்தார்,. கிழக்கு போலீஸ் நிலையத்தில் இருந்து போலீசார் வந்தனர், அவர்களிடம் நடந்த சம்பவத்தை கூறி டாக்டர் சங்கீதா புகார் செய்தார்,

இந்த நிலையில் இன்று இந்த சம்பவத்தை கண்டித்து டாக்டர்கள் மற்றும் ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர், டாக்டர் சங்கீதாவை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோஷம் எழுப்பினார்கள்.

Digiqole Ad

Related post

1 Comment

  • Very good reporting.come with latest news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *