• June 7, 2025

கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் கல்லீரல் பாதிப்பு விழிப்புணர்வு முகாம்  

 கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் கல்லீரல் பாதிப்பு விழிப்புணர்வு முகாம்  

,உலகம் முழுவதும் இன்று (19-ந்தேதி) உலக கல்லீரல் தினம் அனுசரிக்கப்படுகிறது. கல்லீரல் தினத்தை முன்னிட்டு பொதுமக்களிடம் கல்லீரல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், கோவில்பட்டி மாவட்ட அரசு மருத்துவமனை சித்த மருத்துவு பிரிவு சார்பில் சிறப்பு விழிப்புணர்வு முகாமுக்கு  ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

டாக்டர்  அபிநயா தலைமையில், மருந்தாளுனர் முத்துலட்சுமி உதவியுடன், படங்களை கொண்டு கருத்தரங்கு மற்றும் விழிப்புணர்வு முகாம் நடந்தது, இதில் .பொது மக்கள் பங்கேற்றனர்.

உலகில் பலகோடி மக்கள் கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டு உள்ளனர். கல்லீரல் நோயால் பல குடும்பங்கள் பொருளாதார ரீதியாகவும், மனதளவிலும் பாதிப்பு அடைந்துள்ளார்கள். நம்முடைய உணவு பழக்கவழக்கங்களில் கல்லீரலின் பாதிப்புக்கள் என்ன? மற்றும் மதுவினாலும் , துரித உணவுகள், புகையிலைப்பொருட்களினாலும், மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் மருந்து உண்ணும் பழக்கம், போன்றவற்றினால் கல்லீரல் பாதிப்புகள் ஏற்படுவது பற்றி பற்றிய விழிப்புணர்வு ஏற்ப்டுத்தப்பட்டது.. மேலும் ஆரோக்கியமான கல்லீரல்… ஆரோக்கியமாக வாழுங்கள்’ என்ற தலைப்பில் கருத்தரங்கு நடைபெற்றது

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *