• June 7, 2025

Month: February 2023

கோவில்பட்டி

கோவில்பட்டி மார்க்கெட் பிரச்சினை: சட்டமன்றத்தில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்படும்; வியாபாரிகள்

கோவில்பட்டியில் நகராட்சி  கட்டுப்பாட்டின் கீழ்  பசும்பொன் உ.முத்துராமலிங்கத் தேவர் தினசரி சந்தை இயங்கி வருகிறது. இங்குள்ள 398 கடைகளை இடித்துவிட்டு, கலைஞரின் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.6.84 கோடி மதிப்பில் புதியதாக 251 கடைகள் கட்டுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. தினசரி சந்தையில் புதிய கடைகள் கட்டப்பட்டு பயன்பாட்டுக்கு வரும்வரை தற்காலிக சந்தை ஜன.26-ம் தேதி முதல் புறவழிச்சாலையில் உள்ள புதிய கூடுதல் பேருந்து நிலைய வளாகத்தில் செயல்படும் என அறிவிக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து […]

செய்திகள்

காமராஜரை கொச்சைப்படுத்தி பேசிய ஆ.ராசாவை முதல்-அமைச்சர் கண்டிக்காதது ஏன்? டி.ஜெயக்குமார் கேள்வி

பெருந்தலைவர் காமராஜர் பற்றி தவறான கருத்துக்களை தெரிவித்த தி.மு.க. எம்.பி. ஆ.ராசாவை கண்டித்து சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே, தமிழ்நாடு நாடார் பேரவை சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பெருந்தலைவர் மக்கள் கட்சியின் தலைவர் என்.ஆர். தனபாலன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், தி.மு.க. எம்பி ஆ ராசாவுக்கு எதிராக கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இந்த ஆர்ப்பாட்டத்தில் அ.தி.மு.க.  சார்பில் அமைப்புச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான டி ஜெயக்குமார் கலந்து கொண்டு  பேசினார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு […]

செய்திகள்

திருத்தணி முருகன் கோயிலுக்குள் புகுந்த குரங்குகள் அட்டகாசம்; பக்தர்கள் தரிசனம் ஒரு மணி

முருகபெருமானின்  அறுபடை வீடுகளில் 5-ஆம் படைவீடாக போற்றப்படுவது திருத்தணி முருகன் கோயிலாகும். இந்த கோயிலுக்கு தமிழகம் மட்டும் இல்லாமல் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் அதிக அளவில் வருகின்றனர். தற்போது இந்த கோயிலில் குரங்குகள் அட்டகாசம் அதிகரித்து வருகிறது. கோயிலில் வழங்கப்படும் அன்னதானத்தை பக்தர்கள் சாப்பிடும்போது அதை குரங்குகள் பறித்து செல்கின்றன. மேலும் பக்தர்கள் கையில் கொண்டு வரும் உணவு பொருட்களை குரங்கள் திடீரென பாய்ந்து பறித்து விடுகிறது. நேற்று செவ்வாய்க்கிழமை முருகனுக்கு […]

கோவில்பட்டி

கோவில்பட்டியில் ஒதுக்கப்பட்ட நிதியில் வேறு இடத்தில் புதிய சந்தை ; பா.ஜனதா வலியுறுத்தல்

தூத்துக்குடி வடக்கு மாவட்ட பா.ஜனதா நிர்வாகிகள் கூட்டம் கோவில்பட்டியில் நடைபெற்றது. மாவட்ட தலைவர் வெங்கடேசன் சென்னகேசவன் ,தலைமை தாங்கினார். கூட்டத்தில் மாநில மகளிர் அணி தலைவி  உமாரதி ராஜன் , மாவட்ட பார்வையாளர் ராமமூர்த்தி, நகர தலைவர் சீனிவாசன், மாவட்ட பொதுசெயலாளர்கள் கிஷோர் குமார், சரவனகிருஷணன், வேல்ராஜா, பொருளாளர்  கணேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் தொடர்பாக மாவட்ட தலைவர் வெங்கடேசன் சென்னகேசவன் ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில் அவர் கூறி இருப்பதாவது:- […]

தூத்துக்குடி

உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை வழங்கும் “புதுமைப்பெண்” இரண்டாம் கட்ட

பெண்கள், குழந்தைகள், மூத்த குடிமக்கள், திருநங்கையர் போன்றவர்களின் நலனை காத்திடும் வகையில் தமிழக அரசு பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில், பெண் கல்வியை போற்றும் விதமாகவும், உயர்கல்வியை உறுதி செய்து இன்றைய பெண் சமூகம் நாளைய தமிழகத்தை தாங்கும் அறிவியல் வல்லுநர்களாகவும், மருத்துவராகவும், பொறியாளராகவும், படைப்பியலாளராகவும், நல்ல குடிமக்களை பேணும் உயர்கல்வி கற்ற பெண்களாகவும், கல்வியறிவு, தொழில்நுட்பம் நிறைந்த உழைக்கும் சமூகத்தை சார்ந்தவராகவும், உருவாக அடித்தளமாக “புதுமைப் பெண்” என்னும் உன்னத திட்டத்தை […]

கோவில்பட்டி

உடல்நலக்குறைவால் மரணம்: கோவில்பட்டி ஓய்வுபெற்ற உதவி ஆய்வாளர் இருதயராஜ் உடலுக்கு போலீசார்  அஞ்சலி

கோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்ற இருதயராஜ் உடல் நலைக்குறைவால் இன்று காலை மரணம் அடைந்தார்.அவருக்கு வயது 64 அவரது  உடலுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் உத்தரவின்படி கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான போலீசார் மலர் வளையம் வைத்து அஞ்சலி. கோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்தில் பணிபுரிந்து பணி ஓய்வு பெற்ற சிறப்பு உதவி ஆய்வாளர் . இருதயராஜ் 1986 ம் […]

கோவில்பட்டி

கோவில்பட்டி தினசரி மார்க்கெட் வியாபாரிகள் கடையடைப்பு போராட்டம்; ஆதரவு தெரிவித்து ஓட்டல், நகை,

கோவில்பட்டி பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் தினசரி மார்க்கெட்டை கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ. 6.84 கோடி மதிப்பில் புதுப்பிக்க முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து, மார்க்கெட்டை கூடுதல் பஸ் நிலையத்திற்கு தற்காலிகமாக மாற்ற நகராட்சி நிர்வாகம் முடிவு செய்தது. இதற்கு வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், சில வியாபாரிகள் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் இடமாற்றம் செய்வதற்கு தடையாணை பெற்றனர்.. இந்த நிலையில் நகராட்சி அதிகாரிகள் மார்க்கெட்டுக்குள் வாடகை பாக்கி உள்ள கடைகளுக்கு சீல் வைக்கும்நடவடிக்கையில் […]

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் 1950 பேருக்கு கணினி பட்டா; ஆட்சியர் தகவல்

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:- : தமிழ்நாடு முதலமைச்சர் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறையின் மூலம் பல்வேறு நலத்திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்கள். தூத்துக்குடி மாவட்டத்தில் ஆதிதிராவிட மாணவ, மாணவியர் பயன்பெறும் வகையில் விடுதிகள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. பள்ளி மாணவியர்களுக்காக 23 விடுதிகளும், பள்ளி மாணவர்களுக்காக 27 விடுதிகளும், கல்லூரி மாணவிகளுக்காக 1 விடுதியும், கல்லூரி மாணவர்களுக்காக 2 விடுதிகளும், ஐ.டி.ஐ மாணவர்களுக்காக 1 விடுதியும் என மொத்தம் […]

செய்திகள்

குக்கர் சின்னம் கிடைக்காததால் ஈரோடு கிழக்கு தொகுதியில் அ.ம.மு.க. போட்டியிடவில்லை; டி.டி.வி.தினகரன் அறிவிப்பு

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு குக்கர் சின்னம் தேர்தல் ஆணையத்தால் ஒதுக்கப்படாத காரணத்தினால், இடைத்தேர்தலில் கழகம் போட்டியில்லை என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-‘ ,ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் கழக வேட்பாளர் அறிவிக்கப்பட்டு, களத்தில் பரப்புரை பணிகள் முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்தச் சூழலில் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சியான அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு கடந்த சட்டமன்றப் […]

கோவில்பட்டி

கோவில்பட்டி ராவிள்ளா கே.ஆர்.ஏ. கல்வி குழும விளையாட்டு விழா; சி.பி.எஸ்.இ.பள்ளியின் பாண்டியா அணி

கோவில்பட்டி ராவிள்ளா கே.ஆர்.ஏ. கல்வி குழுமத்தின் 28-வது ஆண்டு விளையாட்டு விழா, பள்ளிக்கூட வளாகத்தில் 6-ந்தேதி திங்கட்கிழமை பிற்பகலில் நடைபெற்றது. பள்ளிக்குளுமத்தின் கீழ் கே.ஆர்.ஏ. மெட்ரிக்குலேசன் பள்ளி, ராவிள்ளா வித்யாலயா சி.பி.எஸ்.இ. பள்ளிகள் ஒரே இடத்தில் இயங்கி வருகின்றன, விளையாட்டு விழாவில் இரண்டு பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் பங்கேற்றனர், விழாவை முன்னிட்டு பெற்றார்கள் அதிக அளவில் கூடி இருந்தனர், அவர்கள் அமருவதற்கு வசதியாக மைதானத்தின் ஒரு பகுதியில் சாமியானா பந்தல் போட்டு நாற்காலிகள் போடப்பட்டு இருந்தன, […]