• June 7, 2025

காமராஜரை கொச்சைப்படுத்தி பேசிய ஆ.ராசாவை முதல்-அமைச்சர் கண்டிக்காதது ஏன்? டி.ஜெயக்குமார் கேள்வி

 காமராஜரை கொச்சைப்படுத்தி பேசிய ஆ.ராசாவை முதல்-அமைச்சர் கண்டிக்காதது ஏன்? டி.ஜெயக்குமார் கேள்வி

பெருந்தலைவர் காமராஜர் பற்றி தவறான கருத்துக்களை தெரிவித்த தி.மு.க. எம்.பி. ஆ.ராசாவை கண்டித்து சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே, தமிழ்நாடு நாடார் பேரவை சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பெருந்தலைவர் மக்கள் கட்சியின் தலைவர் என்.ஆர். தனபாலன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், தி.மு.க. எம்பி ஆ ராசாவுக்கு எதிராக கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

இந்த ஆர்ப்பாட்டத்தில் அ.தி.மு.க.  சார்பில் அமைப்புச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான டி ஜெயக்குமார் கலந்து கொண்டு  பேசினார்.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியின் போது கூறியதாவது;-

ஆளும் விடியா திமுக அரசு ஆட்சிக்கு வந்தபிறகு மக்களுடைய பணிகளைக் கவனிக்காமல்,மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றாமல் மறைந்த தலைவர்களை கொச்சைப்படுத்தியும் மற்றும் பல்வேறு சமுதாய மக்களை இழிவுபடுத்துகின்ற செயல்களைச் செய்துவருகிறது. இதனை எல்லாம் கண்டும் காணாமலும், வேடிக்கை பார்த்துக்கொண்டு இதனை எல்லாம் ஊக்கப்படுத்துகின்ற வகையில்தான் விடியா திமுக அரசின் முதலமைச்சர் ஸ்டாலின் இருக்கின்றார்.

நான் சர்வாதிகாரியாக மாறிவிடுவேன் என்று அவ்வப்போது சொல்கிறாரே தவிர ஆனால் அந்த சர்வாதிகாரதனத்தை எதிர்க்கட்சிகளிடத்திலே வெளிப்படுத்தி,எதிர்க்கட்சியினர்  யாரும் பேசக்கூடாது குறிப்பாக,அதிமுக ஜனநாயக ரீதியில் தன்னுடைய கருத்துக்களைச் சொல்லிவந்தாலும்கூட அந்த கருத்துக்களுக்குச் செவிமடுக்காமல்,அவர்கள் ஆட்சியை விமர்சனம் செய்தால் வழக்குகள் போடுவது,சிறையில் தள்ளுவது,அதேபோல ஊடகவியலாளர்கள் இந்த ஆட்சிக்கு எதிரான கருத்துக்களைத் தெரிவித்தால் அவர்களைச் சிறையில் தள்ளுவது,வழக்குகள் போடுவது போன்ற செயல்களைத்தான் செய்கின்றார்களே தவிர,ஆட்சிப் பொறுப்புக்கு வந்துவிட்டோம்,மக்களுக்கு நல்லது செய்வோம் என்ற எண்ணம் கிஞ்சித்தும் கூட இல்லை.

மறைந்த தலைவர்களை கொச்சைப்படுத்துவது,ஆதிதிராவிட மக்களை கொச்சைப்படுத்துவது இதுபோன்ற செயல்கள் அனைத்தும் நடைபெறுகின்ற சூழ்நிலை,ஆட்டை கடித்து மாட்டைக் கடித்து கடைசியில் மனிதனைக் கடித்த கதையாகப் பெருந்தலைவரைக் கொச்சைப்படுத்தியுள்ளார்கள்.

பெருந்தலைவர் காமராஜர் சுதந்திரத்திற்காக ஏறக்குறைய 10 ஆண்டுகள் போராடி பிறகு ஆட்சிக்கு வந்து தமிழக முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்களைக் கொண்டுவந்து, இன்றைக்கும் அந்த திட்டங்கள் தமிழக மக்களால் பேசப்படுகின்ற நிலை இருக்கின்ற சூழ்நிலையில் பெருந்தலைவரை இழிவுபடுத்துகின்ற வகையிலே,ஒரு பண்பாடு இல்லாத வகையிலும் ஒரு அரைவேக்காட்டுதனமாக,அரசியலில் திமுகவிலிருந்து ஒதுக்கப்பட்ட காரணத்தினாலே தன்னுடைய இருப்பை காட்டவேண்டும் என்பதற்காக அவ்வப்போது மதங்களையும்,அவ்வப்போது ஜாதிகளையும்,மதங்களையும் இழிவுபடுத்துவது,ஊழல்வாதி ராசாவுக்குக் கைவந்த கலை.

வாய்துடுக்கு இவ்வளவு இருக்கும்போது,இந்த செயல் குறித்துத் தெரிந்தும் தெரியாமல் ஸ்டாலின் இருக்கிறார்.தூங்குபவரை எழுப்பிவிடலாம்.ஆனால் தூங்குபவர் போல நடிப்பவரை எழுப்ப முடியாது.இதுபோன்ற செயல்களை ஸ்டாலின் சொல்லித்தான் செய்கின்றாரா.?

தொடர்ச்சியாக இவ்வளவு பெரிய அளவுக்குப் பெருந்தலைவரை கொச்சைப்படுத்தும் வகையிலே அவர் வார்த்தைகளை உபயோகித்து,அதன் அடிப்படையில் ராசாவை ஒரு வார்த்தைகூட கண்டிக்காதது என்பது,உண்மையிலே அவருடைய ஆசியோடு ஆ.ராசா சொல்கின்றாரா என்றால் இன்றைக்கு நாடார் சமுதாய மக்கள் மட்டுமல்ல அவர் மீது பக்தி கொண்ட அத்தனை மக்களும் நினைக்கின்ற சூழ்நிலை உள்ளது,

 பெருந்தலைவர் மட்டுமன்றி,நீதிபதிகளை விமர்சனம் செய்வது,பத்திரிக்கைகளை விமர்சனம் செய்வது,பெண்களை அமைச்சர் பொன்முடி விமர்சனம் செய்வது,ஆதிதிராவிட சமுதாய மக்களை விமர்ச்சனம் செய்வது கேலிக் கூத்தாக மக்கள் இன்றைக்கு நினைத்துக்கொண்டிருக்கின்ற,ஒரு துக்ளக் அரசு ஆளுகின்ற என்ற நிலைதான் தமிழகத்தில் உள்ளது.

ஆட்சிக்கு வருவதற்கு முன் திமுக அளித்த வாக்குறுதிகளான நீட் தேர்வை ரத்து, நகை கடன் ரத்து, அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதியத்தை மீண்டும் அமல்படுத்துவோம் என்ற வாக்குறுதிகள் எல்லாம் திமுக அரசு மறந்தாலும், தமிழக மக்கள் அவற்றை மறக்காமல் எதிர்வரும் தேர்தல்களில் திமுகவுக்கு தக்க பாடம் புகட்டுவார்கள்.

மழையால் பாதித்த மாவட்டங்களுக்கு நேரில் சென்று நெல் பயிர்களை ஆய்வு செய்யாமல், தலைமை செயலகத்துக்கே பாதித்த நெருப்பயிர்களை கொண்டு வந்து ஆய்வு நடத்திய முதலமைச்சர், தமிழக மக்களின் மீது எவ்வளவு அக்கறை உள்ளது என்பதை தமிழக மக்கள் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.திமுகவினர் எங்கு கூட்டம் நடத்தினாலும், அங்கு உள்ள வணிகர்களிடம் மிரட்டி பணம் வாங்கிக் கொண்டுதான் கூட்டங்களை  நடத்துகின்றனர்.  திமுக சட்டமன்ற உறுப்பினர்களே வணிகர்களை மிரட்டி பணம் பறித்தால் மற்ற நிர்வாகிகளின் நிலை எப்படி இருக்கும் என்பதை தமிழக மக்கள் தான் புரிந்து கொள்ள வேண்டும்.

புரட்சித்தலைவர் எம்ஜிஆர், புரட்சித்தலைவி அம்மாவின் ஆகியோரது ஆசியுடனும், ஒட்டுமொத்த தமிழக மக்களின் பேராதரவோடும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக  அமோக வெற்றி பெறும்

இவ்வாறு முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறினார்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *