உடல்நலக்குறைவால் மரணம்: கோவில்பட்டி ஓய்வுபெற்ற உதவி ஆய்வாளர் இருதயராஜ் உடலுக்கு போலீசார் அஞ்சலி

கோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்ற இருதயராஜ் உடல் நலைக்குறைவால் இன்று காலை மரணம் அடைந்தார்.அவருக்கு வயது 64
அவரது உடலுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் உத்தரவின்படி கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான போலீசார் மலர் வளையம் வைத்து அஞ்சலி.
கோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்தில் பணிபுரிந்து பணி ஓய்வு பெற்ற சிறப்பு உதவி ஆய்வாளர் . இருதயராஜ் 1986 ம் ஆண்டு இரண்டாம் நிலை காவலராக பணியில் சேர்ந்து தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு காவல் நிலையங்களில் சிறப்பாக பணியாற்றி பதவி உயர்வு பெற்று கோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணிபுரிந்து கடந்த 2018ம் ஆண்டு பணியிலிருந்து ஓய்வு பெற்றார். இவருக்கு மனைவியும், 3 பிள்ளைகளும் உள்ளனர்.
இருதயராஜ் இறுதிச்சடங்கு கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட முத்தையம்மாள் தெருவில் உள்ள அவரது வீட்டில் நடைபெற்றது.
தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர். சி. சைலேந்திர பாபு சுற்றறிக்கை குறிப்பாணையின்படி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் உத்தரவின்படி தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பாக கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய ஆய்வாளர் (பொறுப்பு) பத்மாவதி அவர்கள் தலைமையில் 16 போலீசார், இருதயராஜ் அவர்களது உடலுக்கு மலர்வளையம் வைத்து இறுதி அஞ்சலி செலுத்தினர்.
மேலும் உதவி ஆய்வாளர் . ரவீந்திரன், சிறப்பு உதவி ஆய்வாளர்கள் தமாரியப்பன், . காளிபாண்டி, வீரராகவன், சங்கரநாராயணன், சேர்மராஜ், , ஹேமா மற்றும் தலைமைக் காவலர்கள், காவலர்கள் என 16 போலீசார் மற்றும் தூத்துக்குடி மாவட்டம் ஓய்வு பெற்ற காவலர் பொதுநலச் சங்கம் சார்பாக அதன் தலைவர் ஜெபமணி மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டு இருதயராஜ் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
