• June 7, 2025

கோவில்பட்டி ராவிள்ளா கே.ஆர்.ஏ. கல்வி குழும விளையாட்டு விழா; சி.பி.எஸ்.இ.பள்ளியின் பாண்டியா அணி ஒட்டுமொத்த `சாம்பியன்‘

 கோவில்பட்டி ராவிள்ளா கே.ஆர்.ஏ. கல்வி குழும விளையாட்டு விழா; சி.பி.எஸ்.இ.பள்ளியின்  பாண்டியா அணி ஒட்டுமொத்த `சாம்பியன்‘

கோவில்பட்டி ராவிள்ளா கே.ஆர்.ஏ. கல்வி குழுமத்தின் 28-வது ஆண்டு விளையாட்டு விழா, பள்ளிக்கூட வளாகத்தில் 6-ந்தேதி திங்கட்கிழமை பிற்பகலில் நடைபெற்றது. பள்ளிக்குளுமத்தின் கீழ் கே.ஆர்.ஏ. மெட்ரிக்குலேசன் பள்ளி, ராவிள்ளா வித்யாலயா சி.பி.எஸ்.இ. பள்ளிகள் ஒரே இடத்தில் இயங்கி வருகின்றன,

விளையாட்டு விழாவில் இரண்டு பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் பங்கேற்றனர், விழாவை முன்னிட்டு பெற்றார்கள் அதிக அளவில் கூடி இருந்தனர், அவர்கள் அமருவதற்கு வசதியாக மைதானத்தின் ஒரு பகுதியில் சாமியானா பந்தல் போட்டு நாற்காலிகள் போடப்பட்டு இருந்தன, தாகம் தணிக்க தண்ணீர் நிரப்பிய அண்டாக்களும் வைக்கபட்டு இருந்தன,

சரியாக 2 மணிக்கு சிறப்பு விருந்தினர்கள் வந்தனர், அவர்களை பள்ளிக்கூட வாசலில் இருந்து  மாணவர் குழுவினரின் பாண்டு வாத்தியம் முழங்க சாரண, சாரணியர் அணிவகுப்பு மரியாதையுடன் ராவில்லா கே.ஆர்.ஏ.கல்விக்குழும இயக்குனர் எஸ்.ஜான்சி ராணி , சி.பி.எஸ்.இ.பள்ளி முதல்வர் செல்டன் பெர்னாண்டஸ், மெட்ரிக் பள்ளி முதல்வர் பி.ஜான்சிராணி ஆகியோர்  அழைத்து சென்றனர்.

தொடர்ந்து  தலைமை விருந்தினரான  அர்ஜுனா விருது பெற்ற, தமிழ்நாடு மின்வாரிய முதுநிலை விளையாட்டு அதிகாரி பி.கணேசன் தேசிய கொடி ஏற்றினார். சிறப்பு விருந்தினராக பங்கேற்ற  கோவில்பட்டி மேற்கு போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் அரிக்கண்ணன் ஒலிம்பிக் கொடியேற்றினார், தொடர்ந்து ஒலிம்பிக் ஜோதியை தொடர் ஓட்டம் மூலம் கொண்டுவந்த மாணவர்கள், அவரிடம் ஒப்படைத்தனர்

ராவில்லா கே.ஆர்.ஏ. கல்வி குழுமத்தின் மேனேஜிங் டிரஸ்டி அருண் செல்வராஜ், புறாக்களை பறக்க விட்டார். பள்ளி தாளாளர் மைத்ரேயி பிரியா அருண்  பள்ளிக்கொடியை ஏற்றினார்.

தொடர்ந்து சேர, சோழ, பாண்டியா, பல்லவா அணிகளின் அணிவகுப்பு நடைபெற்றது. ஒவ்வொரு அணியினரும் அணிவகுத்து வந்து சிறப்பு விருந்தினர்களுக்கு  மரியாதை அளித்தனர், அதனை சல்யூட் அடித்து அவர்கள் ஏற்றுக்கொண்டனர்,.

அதை தொடர்ந்து விழா மேடையில் விருந்தினர்கள் அமர்ந்து கலை நிகழ்ச்சிகளை கண்டுகளித்தனர். எல்.கே.ஜி.மற்றும் யு.கே.ஜி. சிறுவர், சிறுமியர்களின் வரவேற்பு நடனத்துடன் கலை நிகழ்ச்சிகள் தொடங்கின,. இசைக்கு ஏற்ப அவர்கள் ஆடிய 2 நிமிட நடனம் பார்வையாளர்களை பெரிதும் கவர்ந்தது.

அவர்களை தொடர்ந்து பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடந்தன. அவற்றில் சிலம்பாட்டம், யோகா, கொடி நடனம் போன்றவை ரசிக்கும்படி இருந்தது. கலைநிகழ்ச்சிகள் முடிந்ததும் விளையாட்டு போட்டிகள் தொடங்கின.

முதலில் சிறுவர் சிறுமியர்களுக்கான போட்டிகள் நடத்தப்பட்டு பரிசு மற்றும் சான்றிதழ்கள் உடனுக்குடன் வழங்கப்பட்டன, பின்னர் பெரிய வகுப்பு மாணவர் மாணவிகளுக்கான ஓட்டப்பந்தயம், தொடர் ஓட்டப்பந்தயம். நடைபெற்றது. மேலும் ஸ்கேட்டிங் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடந்தன.

விழாவிற்கு வந்திருந்த பெற்றோர்களுக்கான ஓட்டப்பந்தயம், ஆசிரியர் ஆசிரியைகளுக்கான தொடர் ஓட்டப்பந்தயம் நடைபெற்றது,

சேர, சோழ, பாண்டியா மற்றும் பல்லவா அணிகளுக்கு இடையேயான போட்டிகளில் மெட்ரிக் பள்ளியில் சோழா அணி அதிக புள்ளிகள் எடுத்து சாம்பியன் ஆனது.

இதே போல் சி.பி.எஸ்.இ. பள்ளியின் பாண்டியா அணி அதிக புள்ளிகள் எடுத்து சாம்பியன் ஆனது.

இறுதியில் சாம்பியன் பட்டம் பெற்ற அணிகளுக்கு சிறப்பு விருந்தினர் பி.கணேசன் மற்றும் ராவில்லா கே.ஆர்.ஏ. கல்வி குழுமத்தின் மேனேஜிங் டிரஸ்டி அருண் செல்வராஜ், பள்ளி தாளாளர் மைத்ரேயி பிரியா அருண் ஆகியோர் பரிசு கோப்பை வழங்கினார்கள். விழா முடிவில் கல்வி குழும இயக்குனர் எஸ்.ஜான்சி ராணி நன்றி கூறினார்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *