• June 7, 2025

கோவில்பட்டி தினசரி மார்க்கெட் வியாபாரிகள் கடையடைப்பு போராட்டம்: பல்வேறு சங்கங்களின் ஆதரவு குவிகிறது

 கோவில்பட்டி தினசரி மார்க்கெட் வியாபாரிகள் கடையடைப்பு போராட்டம்: பல்வேறு சங்கங்களின் ஆதரவு குவிகிறது

கோவில்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து பசும்பொன் முத்துராமலிங்கதேவர் தினசரி சந்தை வியாபாரிகள் நாளை 8 -ந்தேதி புதன்கிழமை முழு கடையடைப்பு போராட்டம் நடத்துகிறார்கள்.

இந்த கடையடைப்பு போராட்டத்துக்கு போராட்டத்துக்கு பல்வேறு சங்கங்களின் ஆதரவு குவிந்து வருகிறது, மந்திதோப்பு அனைத்து வியாபாரிகள் சங்கம்,மாதாங்கோவில் ரோடு வியாபாரிகள் சங்கம்,நடராஜபுரம் அனைத்து வியாபாரிகள் சங்கம்,பசுவந்தனை ரோடு வியாபாரிகள் சங்கம், கோவில்பட்டி பிளாஸ்டிக் உற்பத்தியாளர் சங்கம், புதுக்கிராமம் அனைத்து வியாபாரிகள் சங்கம், தாமஸ் நகர் மற்றும் இலுப்பையூரணி வியாபாரிகள் சங்கம்,கோவில்பட்டி நெல், அரிசி வர்த்தக சங்கம் தங்கள் ஆதரவை தெரிவித்து உள்ளன,

இதே போல் கோவில்பட்டி நகை வியாபாரிகள் சங்கம், தொழில் வர்த்தக சங்கம், அனைத்து உணவக உரிமையாளர்கள் சங்கம், நுகர்பொருள் விநியோகஸ்தர் சங்கம், மார்க்கெட் வளைவு ர்போடு சுமை தூக்கும் தொழிலாளர் சங்கம் , வேலாயுதபுரம் நாடார் அனைத்து வியாபாரிகள் சங்கம், பாரதிநகர் வியாபாரிகள் சங்கம, ஜோதிநகர், சுப்ரமணியபுரம், ஸ்டாலின் காலனி வியாபாரிகள் சங்கம் , கடலையூர் ரோடு வியாபாரிகள் சங்கம், கே கோவில்பட்டி லாலா சுவீட்ஸ், மிட்டாய் கடை, பேக்கரீஸ் ஓட்டல்  உரிமையாளர் சங்கம், கோவில்பட்டி வட்டார சிறிய உணவு பொருட்கள் தயாரிப்பாளர்கள் விற்பனையாளர்கள் நலச்சங்கம் ஆகியவையும் தங்கள் ஆதரவை தெரிவித்து உள்ளன.

மேற்கண்ட சங்கங்களின் தலைவர், செயலாளர், பொருளாளர் ஆகியோர் இந்த ஆதரவை தெரிவித்து இருக்கிறார்கள்.

இதன் மூலம் நாளை கோவில்பட்டி முழுவதும் முழு கடையடைப்பு போராட்டம் நடைபெறும் என்று தெரிகிறது.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *