• June 7, 2025

Month: December 2022

கோவில்பட்டி

இமாச்சலப் பிரதேச தேர்தல் வெற்றி: கோவில்பட்டியில் காங்கிரசார் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

இமாச்சலப் பிரதேச சட்டமன்ற தேர்தலில் அதிக இடங்களில் வெற்றி பெற்று காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடித்து இருக்கிறது, இதையொட்டி கோவில்பட்டியில் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் வெற்றி கொண்டாட்டம் நடைபெற்றது. காந்தி மண்டபம் முன்பு பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஆர் காமராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட துணைத் தலைவர் திருப்பதி ராஜா ,மாநில துணை துணைத்தலைவர் மாரிமுத்து ஆகியோர் முன்னிலை வைத்தனர்இமாச்சலப் பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியின் வெற்றி 2024 நாடாளுமன்ற […]

கோவில்பட்டி

கோவில்பட்டி: பெட்ரோல், டீசல் தரத்தை வாடிக்கையாளர்கள் பரிசோதனை செய்தனர்

கோவில்பட்டி மெயின் ரோட்டில் உள்ள இந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனத்தின் விற்பனை நிலையமான ஞானமலர் பெட்ரோல் பங்க் செயல்பட்டு வருகிறது.இந்த பங்க்கில் பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவற்றின் அளவு மற்றும் தரத்தை வாடிக்கையாளர்களே சரிபார்த்து கொள்ளும் வகையில் சிறப்பு முகாம் நடந்தது. கோவில்பட்டி தாசில்தார் சுசிலா முகாமை தொடங்கி வைத்தார்.பெட்ரோல் மற்றும் டீசலின் தரத்தை தாசில்தார் முன்னிலையில் வாடிக்கையாளர்கள் சோதனை செய்து பார்த்தனர், அவர்களுக்கு சோதனை செய்யும் முறை பற்றி இந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனத்தினர் விளக்கினர்.அதன்படி பல வாடிக்கையாளர்கள், […]

செய்திகள்

போக்சோவில் கைதான கூலி தொழிலாளிக்கு 15 ஆண்டு சிறை

திண்டுக்கல் மாவட்டம் பழனி கோரிக்கடவு பகுதியைச் சேர்ந்தவர் கூலித்தொழிலாளி முருகவேல்(வயது 32). இவர் கடந்த 2021ல் அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமிக்கு திருமண ஆசை காட்டி பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்ததாக புகார் கூரபப்டது.இதை தொடர்ந்து முருகவேல்போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் மீது மகளிர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது,வழக்கை விசாரித்த மகளிர் நீதிமன்ற நீதிபதி சரண், குற்றம் சாட்டப்பட்ட முருகவேலுக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ. 25 […]

தூத்துக்குடி

தூத்துக்குடி பீச் ரோட்டில் 30 அடி தூரம் உள்வாங்கிய கடல்

வங்கக் கடலில் உருவான மாண்டஸ் புயல் தற்போது தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் சென்னைக்கு தென்கிழக்கில் சுமாட் 550 கி.மீ. தொலைவிலும், காரைக்காலுக்கு கிழக்கு- தென்கிழக்கில் சுமார் 460 கி.மீ. தொலைவிலும் நிலைகொண்டுள்ளது. இந்த புயல் இன்று (டிச.9) இரவு புதுச்சேரி- ஸ்ரீஹரிகோட்டா இடையே கரையைக் கடக்கக் கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், தூத்துக்குடி பீச் ரோட்ட்டில் ரோச் பூங்கா, இனிகோ நகர் பகுதிகளில் இன்று காலை திடீரென 30 அடி தூரம் வரை […]

செய்திகள்

சென்னை உள்பட 6 மாவட்டங்களில் இன்று இரவு பஸ் சேவை கிடையாது

தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் ‘மாண்டஸ்’ புயல் சின்னம் உருவாகியுள்ளது. இதன் காரணமாக கனமழை முதல் அதி கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. பல மாவட்டங்களில் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள ஏற்கனவே அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.அதன் அடிப்படையில் புயல் வீசக்கூடிய மாவட்டங்களில் இதுகுறித்த நடவடிக்கைகளை அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் பல்வேறு துறைகளின் தயார் நிலை குறித்து தமிழக அரசின் தலைமைச் செயலாளர் இறையன்பு தலைமையில் ஒருங்கிணைந்த ஆய்வுக் கூட்டம் நேற்று தலைமைச் செயலகத்தில் […]

செய்திகள்

தீவிரம் அடைந்த ‘மாண்டஸ்’ புயல் இன்று நள்ளிரவு மாமல்லபுரம் அருகே கரையை கடக்கிறது;

வங்கக்கடலில் உருவான ‘மாண்டஸ்’ புயல் தீவிரம் அடைந்து, வட தமிழக கடலோர பகுதிகளை நோக்கி நகர்ந்து வருகிறது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலசந்திரன் கூறியதாவது:- வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள மாண்டஸ் புயல் தொடர்ந்து வடமேற்கு திசையில் நகரும். தீவிரப்புயலாக உள்ள மாண்டஸ் சென்னையில் இருந்து 270 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.காரைக்காலில் இருந்து 200 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. தீவிர புயலாக உள்ள மாண்டஸ் அடுத்த 3 மணி நேரத்தில் புயலாக வலுவிழக்கும். புயல் […]

செய்திகள்

மாண்ட்ஸ்’ புயல் நாளை இரவு கரையை கடக்கிறது ;19 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு

தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது :-9-12-2022 இரவு மாண்டஸ் புயல் கரையைக் கடக்க உள்ள நிலையில், பொது மக்கள் தேவையற்ற பயணத்தை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். பொது மக்கள் தங்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்கள், காய்கறி மற்றும் பால் ஆகியவற்றை முன்கூட்டியே வாங்கி வைத்துக் கொள்ளவேண்டும். பொதுமக்கள் கடற்கரைக்குச் செல்வதைத் தவிர்க்க வேண்டும். பலத்த காற்று வீசும் போது மரங்களின் கீழ் நிற்பதைத் தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். நீர் நிலைகளின் அருகிலும், பலத்த காற்று […]

கோவில்பட்டி

கோவில்பட்டியில் மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் அ.தி.மு.க. நிர்வாகி பலி

கோவில்பட்டி அன்னை தெரசா நகரை சேர்ந்தவர் பெருமாள்சாமி (வயது 45). இவர் அ.தி.மு.க. கிழக்கு ஒன்றிய துணைச் செயலாளராக செயல்பட்டு வந்தார். மேலும் பழைய சாக்கு வியாபாரம் செய்து வந்தார்.இவர் இன்று மாலை தனது வீட்டிலிருந்து கடைக்கு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். மந்திதோப்பு சாலையில் , எதிரே வந்த மோட்டார் சைக்கிள் பெருமாள்சாமி வந்த மோட்டார் சைக்கிளுடன் மோதியது. இதில் அவர் பலத்த காயமடைந்தார். அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சேர்க்கைபட்ட அவருக்கு முதலுதவி […]

தூத்துக்குடி

தூத்துக்குடி- கோயம்புத்தூர் இடையே இரவுநேர எக்ஸ்பிரஸ் ரெயில்; தெற்கு ரெயில்வே பொது மேலாளர்

தெற்கு ரெயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் இன்று மதுரை மீளவிட்டான் ரெயில் நிலையம், மேம்பாலம் இருப்புப் பாதை ஆகிய இடங்களில் ஆய்வு செய்தார். அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:-“மதுரையில் இருந்து தூத்துக்குடிக்கு இரட்டை ரெயில் பாதை வருகிற பிப்ரவரி மாதம் 28ஆம் தேதி முடிவடையும். மார்ச் 1ஆம் தேதி வெள்ளோட்டம் நடைபெறும்தூத்துக்குடியில் இருந்து கோயம்புத்தூருக்கு இரவுநேர எக்ஸ்பிரஸ் ரெயில் விடக்கோரி அதிக அளவில் மனுக்கள் வந்துள்ளன. இது தொடர்பாக பரிசீலனை செய்து, விரைவில் தூத்துக்குடி -கோயம்புத்தூர் […]

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் ‘மாண்டஸ்” புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்- ஆட்சியர் செந்தில்ராஜ்

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-வானிலை மாற்றம் காரணமாக தூத்துக்குடியில் மிதமான மழை பெய்யும் என்று தமிழ்நாடு வானிலை ஆய்வு மையம் கூறியிருக்கிறார்கள். இருந்தாலும் வங்க கடலில் ஏற்பட்டிருக்கின்ற குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மாண்டஸ் புயலாக மாறி வட தமிழ்நாட்டு கரையோரம் கரையை கடக்க இருக்கிறது.இன்றைய வானிலை மாற்றத்தில் தூத்துக்குடியில் மிதமான மழை இருக்கிறது என்று கூறி இருக்கிறார்கள், இனிவரும் நாட்களில் அதிகமாக மழை பெய்யும் பட்சத்தில் தூத்துக்குடியில் அதற்கான […]