கோவில்பட்டி: பெட்ரோல், டீசல் தரத்தை வாடிக்கையாளர்கள் பரிசோதனை செய்தனர்

கோவில்பட்டி மெயின் ரோட்டில் உள்ள இந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனத்தின் விற்பனை நிலையமான ஞானமலர் பெட்ரோல் பங்க் செயல்பட்டு வருகிறது.
இந்த பங்க்கில் பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவற்றின் அளவு மற்றும் தரத்தை வாடிக்கையாளர்களே சரிபார்த்து கொள்ளும் வகையில் சிறப்பு முகாம் நடந்தது. கோவில்பட்டி தாசில்தார் சுசிலா முகாமை தொடங்கி வைத்தார்.
பெட்ரோல் மற்றும் டீசலின் தரத்தை தாசில்தார் முன்னிலையில் வாடிக்கையாளர்கள் சோதனை செய்து பார்த்தனர், அவர்களுக்கு சோதனை செய்யும் முறை பற்றி இந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனத்தினர் விளக்கினர்.
அதன்படி பல வாடிக்கையாளர்கள், பெட்ரோல் மற்றும் டீசலின் அளவு மற்றும் தரத்தை பரிசோதித்தனர். அளவு மற்றும் தரம் சரியாக இருந்ததை உறுதி செய்தனர்.
இதற்கான ஏற்பாடுகளை ஞானமலர் பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் மைக்கேல் அமலதாஸ் மற்றும் அமலி அமலதாஸ் ஆகியோர் செய்திருந்தனர்.

