• June 8, 2025

இமாச்சலப் பிரதேச தேர்தல் வெற்றி: கோவில்பட்டியில் காங்கிரசார் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

 இமாச்சலப் பிரதேச தேர்தல்  வெற்றி: கோவில்பட்டியில் காங்கிரசார் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

இமாச்சலப் பிரதேச சட்டமன்ற தேர்தலில் அதிக இடங்களில் வெற்றி பெற்று காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடித்து இருக்கிறது, இதையொட்டி கோவில்பட்டியில் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் வெற்றி கொண்டாட்டம் நடைபெற்றது. காந்தி மண்டபம் முன்பு பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஆர் காமராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட துணைத் தலைவர் திருப்பதி ராஜா ,மாநில துணை துணைத்தலைவர் மாரிமுத்து ஆகியோர் முன்னிலை வைத்தனர்
இமாச்சலப் பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியின் வெற்றி 2024 நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் ஆட்சி மலர்வதற்கு அடித்தளமாக அமைந்துள்ளது என்று காங்கிரசார் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்,
நிகழச்சியில் காங்கிரஸ் நிர்வாகிகள் கே துரைராஜ் ,கே ராஜசேகரன் ஆர். டி. ஐ. ஜோஸ்வா ஞானசிங், வேலுச்சாமி , பிரேம்குமார் ,உமா சங்கர் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *