போக்சோவில் கைதான கூலி தொழிலாளிக்கு 15 ஆண்டு சிறை

திண்டுக்கல் மாவட்டம் பழனி கோரிக்கடவு பகுதியைச் சேர்ந்தவர் கூலித்தொழிலாளி முருகவேல்(வயது 32). இவர் கடந்த 2021ல் அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமிக்கு திருமண ஆசை காட்டி பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்ததாக புகார் கூரபப்டது.
இதை தொடர்ந்து முருகவேல்
போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் மீது மகளிர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது,
வழக்கை விசாரித்த மகளிர் நீதிமன்ற நீதிபதி சரண், குற்றம் சாட்டப்பட்ட முருகவேலுக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ. 25 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். அரசு தரப்பில் வழக்கறிஞர் ஜோதி வாதாடினார்.
