• June 8, 2025

கோவில்பட்டியில் மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் அ.தி.மு.க. நிர்வாகி பலி

 கோவில்பட்டியில் மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் அ.தி.மு.க. நிர்வாகி பலி

கோவில்பட்டி அன்னை தெரசா நகரை சேர்ந்தவர் பெருமாள்சாமி (வயது 45). இவர் அ.தி.மு.க. கிழக்கு ஒன்றிய துணைச் செயலாளராக செயல்பட்டு வந்தார். மேலும் பழைய சாக்கு வியாபாரம் செய்து வந்தார்.
இவர் இன்று மாலை தனது வீட்டிலிருந்து கடைக்கு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். மந்திதோப்பு சாலையில் , எதிரே வந்த மோட்டார் சைக்கிள் பெருமாள்சாமி வந்த மோட்டார் சைக்கிளுடன் மோதியது. இதில் அவர் பலத்த காயமடைந்தார்.


அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சேர்க்கைபட்ட அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால் வழியிலேயே பெருமாள் சாமி பரிதாபமாக உயிரிழந்தார்.
மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த அன்னை தெரசா நகரை சேர்ந்த ஓய்வு பெற்ற ராணுவ வீரரான சதுரகிரி (52) என்பவருக்கும் காயம் ஏற்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.

இதுகுறித்து கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *