• June 6, 2025

Month: November 2022

தூத்துக்குடி

இந்தி திணிப்பு எதிர்ப்பு பிரசாரத்தில் அமைச்சர் கீதாஜீவன்

தி.மு.க. தலைவர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின் படி,இந்தி திணிப்பு எதிர்ப்பு பிரசாரம் தி.மு.க. சார்பில் நடைபெற்று வருகிறது.இந்தியை கட்டாயமாக திணிக்க முயலும் மத்திய பா.ஜ.க. அரசின் முயற்சி எவ்வாறெல்லாம் தமிழையும், தமிழ்நாட்டு மக்களையும் பாதிக்கும் என்பது பற்றிய விளக்கங்கள் அடங்கிய துண்டுப் பிரசுரங்களை தூத்துக்குடி எஸ்.எஸ். பிள்ளை மார்க்கெட் பகுதியில் அமைச்சர் கீதாஜீவன் மக்களுக்கு வழங்கியபோது. மாநகர தி.மு.க. செயலாளர் ஆனந்தசேகரன் மற்றும் கழக நிர்வாகிகள் உடன் சென்றனர்

தூத்துக்குடி

தூத்துக்குடி புறவழிச்சாலையில் வடிகால் அமைக்கும் பணி; மேயர் பார்வையிட்டார்

தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மழை நீர் மாநகரத்திற்குள் வராமல் இருப்பதற்காக புறவழிச் சாலையில் நடைபெற்று வரும் வடிகால் அமைக்கும் பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி பார்வையிட்டார்.மேலும் மழையினால் பாதிப்படையும் மாநகரின் பிரதான பகுதிகளான கங்காபரமேஸ்வரி நகர், மச்சாது நகர், முத்தம்மாள் காலனி, திரவிய ரத்ன நகர், நிகிலேசன் நகர், முத்து கிருஷ்ணாபுரம், கதிர்வேல் நகர், ஆகிய பகுதிகளுக்கு மழை நீர் வரும் புறநகர் பகுதிகளை பார்வையிட்டார்.சங்கரப்பேரி குளத்தையும், நீர் வழித் தடத்தையும் ஆய்வு செய்தார். “மழை நீர் […]

தூத்துக்குடி

சிறுமிக்கு பாலியல் தொல்லை: போக்சோவில் கைதானவருக்கு 20 ஆண்டுகள் சிறை

தூத்துக்குடி மாவட்டம் கீழமங்கலம் பகுதியைச் சேர்ந்த இசக்கி மகன் சுடலைமாடன் (57) என்பவர் கடம்பூர் அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியை சேர்ந்த 10 வயது சிறுமியை கடந்த 2020 ஆண்டு பாலியல் தொல்லை செய்துள்ளார்.இதுகுறித்து சிறுமியின் பாட்டி அளித்த புகாரின் பேரில் கடம்பூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்து சுடலைமாடன் என்பவரை கைது செய்தனரஇவ்வழக்கை கடம்பூர் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் மாரியம்மாள் புலன் […]

கோவில்பட்டி

கடம்பூர், கயத்தாறில் கனமழை; ரெயில்வே சுரங்க பாலத்தில் குளம் போல் தண்ணீர் தேங்கியது

தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று பல்வேறு ஊர்களில் மழை பெய்தது. மாவட்டம் முழுவதும் 494 மில்லி மீட்டர் மழை அளவு பதிவாகி இருந்தது.கோவில்பட்டி கடம்பூர், கயத்தார் பகுதிகளில் நேற்று மழை 2 மணி நேரம் கனமழை பெய்தது. கடம்பூரில் 82 மி.மீ., 78 மி.மீ. மழை பெய்து இருந்தது. கன மழை காரணமாக தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கியது. சாலைகளில் தண்ணீர் கரைபுரண்டு ஓடியது.கடம்பூர் ரெயில்வே சுரங்க பாதையில் குளம் போல் தண்ணீர் தேங்கியது. இதன் காரணமாக சுரங்க […]

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்றைய மழை அளவு

தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று காலை காலை 6 மணி வரையிலான நேற்றைய மழை அளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:- தூத்துக்குடி -19ஸ்ரீவைகுண்டம் : 76திருச்செந்தூர் : 13காயல்பட்டினம் : 99குலசேகரப்பட்டினம் : 7சாத்தான்குளம் : 5கோவில்பட்டி : 1 கழுகுமலை: 9 கயத்தார் : 78கடம்பூர் : 82எட்டயபுரம் : 28 விளாத்திகுளம் 28 காடல்குடி 28 சூரங்குடி 28 வைப்பார் : 28 ஓட்டப்பிடாரம் : 42மணியாச்சி : 12கீழஅரசடி : 8வேதநாதம் : […]

செய்திகள்

கும்பகோணம் கோவிலில் ஜப்பான் நாட்டினர் சாமி தரிசனம்

புதுச்சேரியை பூர்விகமாக கொண்ட சுப்பிரமணியன், ஜப்பான் நாட்டில் வசித்து வருகிறார். இவர் அங்கு தமிழ் மொழி, கலாசாரம் மற்றும் ஆன்மிகத்தை பரப்பும் நோக்கில் ஆன்மிக வகுப்புகள் நடத்தி வருகிறார்.இவருடன், ஜப்பானில் குருஜியாக விளங்கும் தக்கா யுக்கா ஜோசி மற்றும் இந்திய கலாசாரம், தமிழ் மொழி மீது ஆர்வம் கொண்ட ஜப்பான் நாட்டை சேர்ந்த 15 பேரை கொண்ட குழுவினர் ஜப்பான் நாட்டில் இருந்து இந்தியாவுக்கு சுற்றுலா வந்தனர்.இவர்கள் தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே கீழகொற்கை கிராமத்தில் உள்ள […]

செய்திகள்

8 ரெயில் நிலையங்களில் நடைமேடை டிக்கெட் கட்டணம் மீண்டும் ரூ.10 ஆக நிர்ணயம்

பண்டிகை காலத்தையொட்டி, ரெயில் நிலையங்களில் கூட்ட நெரிசலை குறைக்கும் வகையில், சென்னை சென்டிரல், எழும்பூர் உள்பட 8 ரெயில் நிலையங்களில் நடைமேடை டிக்கெட் கட்டணம் ரூ.10-ல் இருந்து ரூ.20 ஆக உயர்த்தப்பட்டிருந்தது.இந்த நடைமுறை அக்டோபர் 1-ம் தேதி முதல் ஜனவரி 31-ந் தேதி வரை அமலில் இருக்கும் என்று சென்னை ரெயில்வே கோட்டம் கடந்த செப்டம்பர் மாதம் தெரிவித்திருந்தது. இந்தநிலையில், பண்டிகை காலம் முடிந்த நிலையில் அந்த 8 ரெயில் நிலையங்களில் நடைமேடை டிக்கெட் கட்டணம் ரூ.20-ல் […]

செய்திகள்

குளிர்சாதன பெட்டி வெடித்து 3 பேர் பலியான பரிதாபம்

சென்னையை அடுத்த ஊரப்பாக்கம் கோதண்டராமன் நகரில் கிரிஜா என்பவர் வசித்துவருகிறார். இவரின் வீட்டில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக குளிர்சாதன பெட்டி திடீரென வெடித்து சிதறியது.இந்த விபத்தில் வீட்டில் இருந்து கிரிஜா, அவரது தங்கை ராதா உறவினர் ராஜ்குமார் ஆகியோர் தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.இதுகுறித்து அப்பகுதி மக்கள் கொடுத்த தகவலின் பேரில சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து வந்தனர். பின்னர், குளிர்சாதன பெட்டி வெடித்ததில் உயிரிழந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத […]

செய்திகள்

தொடர்மழை: பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளித்த மாவட்டங்கள்

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து இருக்கிறது. இதன் காரணமாக கடந்த 3 தினங்களாக தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது.இந்த நிலையில், கனமழை காரணமாக திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஆவடி, பூந்தமல்லி, பொன்னேரி, திருவள்ளூர் ஆகிய 4 தாலுகாக்களுக்கு மட்டும் பள்ளிகளுக்கு இன்று (4.11.2022) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதுகனமழை காரணமாக சென்னையில் இன்று (4.11.2022) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.தொடர் மழை காரணமாக இன்று (04.11.2022) காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் பகுதியில் இயங்கும் […]

செய்திகள்

கனமழை பெய்தாலும் தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படாது- நெல்லை ஆட்சியர் விஷ்ணு

நெல்லை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையை யொட்டி முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை ஆட்சியர் விஷ்ணு ஆய்வு செய்து வருகிறார். வி.எம்.சத்திரம் அருகே மூர்த்தி நயினார்குளத்தில் கரைகள் பலப்படுத்தப்பட்டு வருகிறது. இந்த பணி களை இன்று ஆட்சியர் விஷ்ணு, மாநகராட்சி கமிஷனர் சிவகிருஷ்ண மூர்த்தி ஆகியோர் ஆய்வு செய்தனர். பின்னர் ஆட்சியர் விஷ்ணு நிருபர்களிடம் கூறியதாவது:- நெல்லை மாவட்டம் முழுவதும் 600 கிலோ மீட்டர் தூரத்துக்கு கால்வாய்கள் உள்ளிட்ட நீர்நிலைகள் தூர்வாரப்பட்டுள்ளது. 75 கிலோ மீட்டர் தூரத்துக்கு கரைகள் பலப்படுத்தப்பட்டுள்ளது. மழை […]