• June 8, 2025

Month: November 2022

கோவில்பட்டி

ஓவியப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு

குழந்தைகள் தினத்தை முன்னிட்டு எம்.ரைட் திட்டத்தின் கீழ் செயல்படும் ஐ.எஸ்.ஏ.பி. தொண்டு நிறுவனத்தில் இருந்து கோவில்பட்டி காந்திநகர் நகராட்சி உயர்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஓவியப்போட்டி நடத்தபட்டது,7, 8, 9, 10- வகுப்புகளில் காலாண்டு தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மற்றும் ஓவியப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன,இந்நிகழ்ச்சிக்கு ஐ.எஸ்.ஏ.பி தொண்டு நிறுவன மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மாரிமுத்து தலைமை தாங்கினார், ஆசிரியர்கள் அப்பனசாமி, கவுசல்யா ஆகியோர் முன்னிலை […]

செய்திகள்

கால்பந்து வீராங்கனை பிரியா மரணத்துக்கு அரசுதான் முழு காரணம் ; டி. ஜெயக்குமார்

சென்னையில் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் அளித்த பேட்டி வருமாறு:-ஒரு சிறந்த கால்பந்தாட்ட வீரராக தமிழகத்தில் மட்டுமில்லாமல் தேசிய அளவிலும் பங்கு பெற்று தமிழகத்தின் பெருமையை நிலைநாட்டினார். காலில் ஏற்பட்ட ligament பிரச்சினை காரணமாக முதலில் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.அப்போதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தால் நிச்சயமாக கால்பந்தாட்ட வீராங்கனை பிரியாவை காப்பாற்றியிருக்க முடிந்திருக்கும்.ஆனால் இப்படிப்பட்ட மிகப்பெரிய மருத்துவமனையில் அனுமதிக்காமல் திருப்பி அனுப்பிய காரணத்தினால் பெரியார் நகரில் உள்ள புறநகர் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார். அந்த மருத்துவமனை […]

செய்திகள்

கொலை வழக்கில் 8 பேருக்கு ஆயுள் தண்டனை

திண்டுக்கல் முத்தழகு பட்டியை சேர்ந்த கூலி தொழிலாளி செபஸ்தியார் என்பவர் கடந்த கடந்த 05-05-2014 அன்றுபடுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை தொடர்பாக அந்தோணி விமல் ராஜ், சின்னப்ப ராஜ், அருள் ஆரோக்கிய தாஸ், தங்கம், ஜஸ்டின் தாஸ், ஜான் பிரபாகர், விக்னேஷ் இன்பராஜ், தாமரைக்கண்ணன் ஆகிய 8 பேரை போலீசார் கைது செய்தனர், கைதானவர்கள் மீதான வழக்கு திண்டுக்கல் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. விசாரணைக்கு பிறகு இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது, குற்றம் சாட்டப்பட்ட 8 பேருக்கு ஆயுள் […]

தூத்துக்குடி

தூத்துக்குடியில் போதைபொருள் கும்பலிடம் சிக்கிய வாக்கி டாக்கியில் போலீஸ் அலைவரிசை ; டி.ஐ.ஜி.

நெல்லை சரக டி.ஐ.ஜி. பிரவேஷ்குமார் தூத்துக்குடியில் மாவட்ட போலீஸ் அலுவலகத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-தூத்துக்குடி மாவட்டத்தில் கஞ்சா விற்பனை, கடத்தலை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நடப்பு ஆண்டில் தூத்துக்குடி மாவட்டத்தில் 149 வழக்குகள் பதிவு செய்து, 256 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.கஞ்சா வழக்குகளில் ஈடுபட்டவர்கள் மற்றும் அவர்களின் உறவினர்கள் உள்பட மொத்தம் 224 பேரின் வங்கி கணக்குகள் முடக்கம் செய்யப்பட்டு உள்ளது. கஞ்சா விற்பனை தொடர்பாக தகவல் தெரிந்தால் போலீசுக்கு தெரிவிக்கும் வகையில் கட்டணமில்லா […]

சினிமா

தெலுங்கு சினிமாவின் `சூப்பர்ஸ்டார்’ கிருஷ்ணா காலமானார்

நடிகர் மகேஷ் பாபுவின் தந்தையும், தெலுங்கு சினிமாவின் சூப்பர்ஸ்டார் என அழைக்கப்படுபவருமான நடிகர் கிருஷ்ணா காலமானார். அவருக்கு வயது 79.நடிகர் கிருஷ்ணா திடீரென வீட்டில் மயங்கி விழுந்து சுயநினைவை இழந்துள்ளார். இதையடுத்து, பதறிப்போன அவரது குடும்பத்தினர் ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவரை அனுமதித்தனர். அங்கு அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு இருப்பது கண்டறியப்பட்டதுமருத்துவமனையில் அவருக்கு 20 நிமிடங்கள் சிபிஆர் சிகிச்சை அளிக்கப்பட்டதை அடுத்து அவருக்கு சுயநினைவு திரும்பியது. பின்னர் தீவிர சிகிச்சை பிரிவில் ஆபத்தான நிலையில் உள்ளார் […]

கோவில்பட்டி

கோவில்பட்டியில் `ஊனமான உண்மை’ நூல் வெளியீட்டு விழா

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் இலக்கிய உலாவின் ஐம்பெரும் விழா விநாயகா ரமேஷ் தலைமையில் நடைபெற்றது. வினோபா முன்னிலை வகித்தார். ராஜ பிரியங்கா வரவேற்று பேசினார் விழாவில் இலக்கிய உலா ரவீந்தரின்`ஊனமான உண்மை’ என்ற நூலை அபிராமி முருகன் வெளியிட லெட்சுமண பெருமாள் பெற்றுக் கொண்டார். முருகேஸ்வரி, ஜெயஸ்ரீ கிறிஸ்டோபர் திறனாய்வு செய்தனர். தொடர்ந்து பார்த்திபனின் `காட்சிப் பிழைகள் பாகம் 2′ நூலை கரு.துரைராஜ் வெளியிட திரைப்பட தயாரிப்பாளர் வசந்த், தாணப்பன், சக்தி வேலாயுதம், ஆகியோர் பெற்றுக் கொண்டனர். […]

தூத்துக்குடி

மக்கள் குறைதீர்க்கும் முகாமில் 352 கோரிக்கை மனுக்கள் குவிந்தன

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ், தலைமையில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் இன்று நடைபெற்றது.கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் , சமூக பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் 10 பயனாளிகளுக்கு மாதந்தோறும் தலா ரூ.1000/- வழங்குவதற்கான முதியோர் உதவித்தொகைக்கான ஆணையை வழங்கினார்.பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் மூலம் 2021-22ஆம் ஆண்டிற்கு மாவட்ட அளவில் அரசு பிற்படுத்தப்பட்டோர் மாணவ, மாணவியர் விடுதிகளில் சிறந்த முறையில் பணியாற்றிய 3 காப்பாளர்களுக்கு நற்சான்றிதழ் மற்றும் கேடயங்களையும் […]

செய்திகள்

மழைசேதம் நிவாரண தொகை அறிவிப்பு

தமிழகத்தில் மழையினால் ஏற்பட்டுள்ள இழப்புகளுக்கு வழங்கப்படும் நிவாரண தொகை பற்றிய விவரங்களை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அறிவித்து உள்ளார். அதன் விவரம் வருமாறு:-மழைவெள்ள பாதிப்பால் ஏற்படும் மனித உயிரிழப்புகளுக்கு ரூ.4 லட்சம் வழங்கப்படும்வீட்டிற்குள் தண்ணீர் புகுந்து இருந்தால்-. ரூ.4,800குடிசை வீடு முழுவதுமாக சேதம் அடைந்து இருந்தால்- ரூ. 5,000குடிசை வீடு பகுதி சேதம் அடைந்து இருந்தால்- ரூ. 4,100கான்கிரீட் கட்டிடம் இடிந்து இருந்தால்- ரூ.95,000பகுதி மட்டும் சேதம் அடைந்து இருந்தால்- ரூ.5,200முழுமையாக சேதம் அடைந்துள்ள வீடுகளுக்கான நிவாரணம்சமவெளியில் உள்ள […]

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த ஆண்டில் இது வரை 238 பேர் மீது குண்டர்

தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த ஆண்டில் இது வரை குண்டர் தடுப்பு சட்ட நடவடிக்கை, மற்றும் கஞ்சா, குட்கா, சட்டவிரோத மதுவிற்பனை தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் பற்றி மாவட்ட காவல்துறை கண்காணிப்பார் பாலாஜி சரவணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-குண்டர் தடுப்புச் சட்டம் : தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த ஆண்டு இதுவரை போதைப் பொருள் விற்பனை மற்றும் கடத்தலில் ஈடுபட்ட 38 எதிரிகள் மற்றும் போக்ஸோ வழக்குகளில் சம்மந்தப்பட்ட 14 எதிரிகள் உட்பட 238 பேர் குண்டர் தடுப்புச் […]

தூத்துக்குடி

தூத்துக்குடி காவல்துறை ரோந்து பணிக்கு 7 வாகனங்கள்

தமிழக அரசு தூத்துக்குடி மாவட்ட காவல்துறையின் ரோந்துப் பணிக்கு வழங்கிய ரூ 64,79,431/- மதிப்புள்ள 7 நான்கு சக்கர ரோந்து வாகனங்களை காவல்துறை தலைமை இயக்குனர் உத்தரவுப்படி இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன் முன்னிலையில் திருநெல்வேலி சரக காவல்துறை துணைத் தலைவர் பிரவேஷ் குமார், கொடியசைத்து தொடக்கி வைத்தார்.தூத்துக்குடி தென்பாகம், வடபாகம், மத்தியபாகம், தாளமுத்துநகர், சிப்காட், முத்தையாபுரம் மற்றும் தெர்மல்நகர் ஆகிய காவல் நிலைய ரோந்துப் பணிக்கு வழங்கினார். இந்நிகழ்வின்போது தூத்துக்குடி ஊரக […]