ஓவியப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு

குழந்தைகள் தினத்தை முன்னிட்டு எம்.ரைட் திட்டத்தின் கீழ் செயல்படும் ஐ.எஸ்.ஏ.பி. தொண்டு நிறுவனத்தில் இருந்து கோவில்பட்டி காந்திநகர் நகராட்சி உயர்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஓவியப்போட்டி நடத்தபட்டது,
7, 8, 9, 10- வகுப்புகளில் காலாண்டு தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மற்றும் ஓவியப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன,
இந்நிகழ்ச்சிக்கு ஐ.எஸ்.ஏ.பி தொண்டு நிறுவன மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மாரிமுத்து தலைமை தாங்கினார், ஆசிரியர்கள் அப்பனசாமி, கவுசல்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர், செவிலியர் காயத்ரி நன்றி கூறினார்,
