• June 8, 2025

8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அஞ்சல் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அஞ்சல் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

கோவில்பட்டியில் அகில இந்திய கிராமிய அஞ்சல் ஊழியர் சங்கம் சார்பில் 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. கோவில்பட்டி தலைமை அஞ்சல் அலுவலக வளாகத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு கோட்ட தலைவர் நெல்லையப்பன், கிளை தலைவர் கணேசமூர்த்தி ஆகியோர் தலைமை வகித்தனர். கோட்ட செயலாளர் பூராஜா, கிளை செயலாளர்கள் பிச்சையா, ராஜாமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் ஊழியர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
கோட்ட பொருளாளர் முருகன், கிளை பொருளாளர் பட்டுராஜன் ஆகியோர் கிராமிய அஞ்சல் ஊழியர்களுக்கு ரூ.5 லட்சம் கிராஜூட்டி வழங்க வேண்டும், 180 நாட்கள் விடுப்பு சேமிப்பை ஓய்வு பெறும் போது ஊழியர்களுக்கு பணமாக வழங்க வேண்டும் உள்ளிட்ட 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினா்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *