கோவில்பட்டி-சுற்றுப்புற கிராமங்களில் 19-ந்தேதி மின்தடை

கோவில்பட்டி மின்வாரிய கோட்டத்தில் உள்ள கோவில்பட்டி, சிட்கோ, கழுகுமலை, எப்போதும் வென்றான், விஜயாபுரி, எம். துரைசாமிபுரம், செட்டிகுறிச்சி, சன்னது புதுக்குடி ஆகிய உப மின் நிலையங்களில் வருகிற 19-ந்தேதி (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருக்கிறது.
எனவே, அன்று காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை மேற்படி உப மின் நிலையங்களில் இருந்து மின்சாரம் பெறும் நகரம் மற்றும் கிராமப் பகுதிகளுக்கு மின்தடை செய்யப்படும் என்று கோவில்பட்டி கோட்ட மின்வாரிய செயற் பொறியாளர் மு. சகர்பான் தெரிவித்துள்ளார்.
