கோவில்பட்டியில் `ஊனமான உண்மை’ நூல் வெளியீட்டு விழா

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் இலக்கிய உலாவின் ஐம்பெரும் விழா விநாயகா ரமேஷ் தலைமையில் நடைபெற்றது. வினோபா முன்னிலை வகித்தார். ராஜ பிரியங்கா வரவேற்று பேசினார் விழாவில் இலக்கிய உலா ரவீந்தரின்
`ஊனமான உண்மை’ என்ற நூலை அபிராமி முருகன் வெளியிட லெட்சுமண பெருமாள் பெற்றுக் கொண்டார். முருகேஸ்வரி, ஜெயஸ்ரீ கிறிஸ்டோபர் திறனாய்வு செய்தனர்.
தொடர்ந்து பார்த்திபனின் `காட்சிப் பிழைகள் பாகம் 2′ நூலை கரு.துரைராஜ் வெளியிட திரைப்பட தயாரிப்பாளர் வசந்த், தாணப்பன், சக்தி வேலாயுதம், ஆகியோர் பெற்றுக் கொண்டனர். தென்னரசு, ராதா ஆகியோர் நூலை திறனாய்வு செய்தனர். நூலாசிரியர்கள் இலக்கிய உலா ரவீந்தர், பார்த்திபன் ஆகியோர் ஏற்புரை வழங்கினர்.
விழாவில் ஏழை மக்களுக்கு 6 தையல் மிஷின்கள், அரிசி உட்பட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. மேலும், அப்துல் கலாம் பிறந்த நாளை முன்னிட்டு நடைபெற்ற கவிதை போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
குழந்தைகள் தின விழா போட்டியில் பங்கேற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. மேலும், சி.பி.எஸ்.இ. பாடப்பிரிவில் தமிழில் 100 மதிப்பெண்கள் எடுத்த 40 மாணவர்களுக்கு அபிராமி பாராட்டு பட்டயம் வழங்கப்பட்டது
விழாவில் பாப்பாக்குடி செல்வமணி வாழ்த்துரை வழங்கினார். வ.உ.சி அரசு பள்ளி தலைமையாசிரியர் சுதாகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்,
