• June 7, 2025

Month: October 2022

கோவில்பட்டி

கோவில்பட்டி உள்பட தமிழகம் முழுவதும் அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் சோதனை;

தமிழகம் முழுவதும் உள்ள அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நேற்று திடீர் சோதனை மேற்கொண்டனர்.தீபாவளியை முன்னிட்டு அன்பளிப்பு பெறுவதாக வந்த புகார்களின் அடிப்படையில் இந்த சோதனை நடத்தப்பட்டது.தமிழகம் முழுவதும் அரசு அலுவலகங்களில் நடந்த இந்த சோதனையில் சோதனையில் கணக்கில் காட்டப்படாத 1 கோடியே 12 லட்சத்து 57 ஆயிரத்து 803 ரூபாய் கைப்பற்றப்பட்டது.அதிகபட்சமாக திருவாரூர் நெடுஞ்சாலை துறை டிவிஷனல் என்ஜினீயர் அலுவலகத்தில் ரூ.75 லட்சம் கைப்பற்றப்பட்டது, நாமக்கல நெடுஞ்சாலை துறை உதவி இயக்குனர் அலுவலகத்தில்ரூ.8 லட்சத்து […]

கோவில்பட்டி

அரசு விழாக்களுக்கு அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களை அழைக்க கூடாது என்று அரசு உத்தரவா? கடம்பூர்

கோவில்பட்டியில் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-அரசு விழாக்களுக்கு அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களை அழைக்க கூடாது என்று தி.மு.க. அரசு வாய்மொழி உத்தரவு பிறப்பித்ததாக கூறுகின்றனர். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இதுகுறித்து சட்டசபையில் கேள்வி எழுப்பப்படும்.மக்களுக்கு வழங்கப்படும் திட்டங்களில் அரசியல் காழ்ப்புணர்ச்சி இருக்க கூடாது. வருகிற நாடாளுமன்ற தேர்தலில் அனைத்து கட்சிகளும் தனித்து நின்றால், அ.தி.மு.க.வும் தனித்து நிற்க தயார். ஏற்கனவே நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தனித்து நின்று 37 […]

கோவில்பட்டி

கோவில்பட்டி கோட்டத்தில், இன்று மின்தடை ஒத்திவைக்கப்பட்டது ஏன்?

கோவில்பட்டி மின்வாரிய கோட்டத்தில் உள்ள கோவில்பட்டி, சிட்கோ, கழுகுமலை, எப்போதும் வென்றான், விஜயாபுரி, எம்.துரைச்சாமிபுரம், செட்டிகுறிச்சி, சன்னது புதுக்குடி ஆகிய துணை மின் நிலையங்களில் இன்று (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதாகவும், இதையொட்டி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.இந்த நிலையில் இந்த மின்தடை திடீர் என நேற்று மாலை ஒத்திவைக்கப்ட்டது. அதாவது இன்று டி.ஆர்.பி. தேர்வு இருப்பதாலும், பருவ மழை காரணமாகவும் […]

கோவில்பட்டி

கோவில்பட்டி அருகே மக்கள் தொடர்பு முகாமில் கலந்து கொள்ளாத அதிகாரிகள்; ஆட்சியர் ஆவேசம்

கோவில்பட்டியை அடுத்துள்ள ஆவல்நத்தம் சமுதாய நலக்கூட்டத்தில் மக்கள் தொடர்பு முகாம் நடந்தது.முகாமிற்கு மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தலைமை தாங்கினார்,முன்கூட்டியே முகாம நடைபெறும் தேதி அறிவிக்கப்பட்டு பல்வேறு துறைகளை சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொள்ளவேண்டும் என்று கேட்டுகொள்ளப்பட்டு இருந்தது. ஆனால் முகாம் நடந்தபோது குறிப்பிட்ட துறை அதிகாரிகள் சிலர் கலந்து கொள்ளவில்லை. பொதுமக்கள் மட்டுமே கூடி இருந்தனர்.இதை கண்ட ஆட்சியர் செந்தில்ராஜ் ஆவேசம் அடைந்தார். அவர் டி.எஸ்.பி.எங்கே? இன்ஸ்பெக்டர் எங்கே? சுகாதார துறையில் இருந்து யார் வந்து இருக்காங்க? […]

கோவில்பட்டி

கல்லூரிகளுக்கு இடையேயான ஆக்கிப்போட்டி ; கோவில்பட்டியில் நாளை தொடக்கம்

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழக அளவிலான கல்லூரிகளுக்கு இடையேயான ஆண்கள் ஆக்கிப்போட்டி கோவில்பட்டி கே. ஆர். நகர் கே. ஆர். கலை மற்றும் அறிவியல் கல்லூரி மைதானத்தில், நாளை (சனிக்கிழமை) தொடங்கி 2 நாட்கள் நடைபெறுகிறது.போட்டியில் நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக அணி, கோவில்பட்டி கே.ஆர். கல்லூரி, ஜி. வி. என். கல்லூரி, எஸ். எஸ். டி. எம். கல்லூரி, அரசு கல்லூரி பாளையங்கோட்டை ஜான்ஸ் கல்லூரி, தூய சேவியர் கல்லூரி, நாகர்கோவில் ஸ்கார்ட் கிறிஸ்தவ […]

கோவில்பட்டி

கர்ப்பிணிப் பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா

தமிழ்நாடு அரசின் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பாக ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் திட்டத்தின் கீழ் ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாப்பிள்ளையூரணி ஊராட்சியில்கர்ப்பிணிப் பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது. ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா கலந்து கொண்டு வளைகாப்பு விழாவை துவக்கி வைத்து சீதன பொருட்களை கர்ப்பிணி பெண்களுக்கு வழங்கினார் .பின்னர் அவர்களுக்கு விருந்து பரிமாறப்பட்டது.இந்நிகழ்வில் தூத்துக்குடி வட்டாட்சியர் ஆர்.செல்வகுமார், தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலர் ராமராஜ், .நாகராஜன், பொறியாளர் தளவாய், மாப்பிள்ளையூரணி […]

செய்திகள்

தேவர் ஜெயந்தி: 13 கிலோ தங்க கவசம் ஒப்படைப்பது யாரிடம்?

ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில், முத்துராமலிங்க தேவரின் நினைவிடம் உள்ளது. இங்குள்ள தேவரின் சிலைக்கு, அதிமுக சார்பில் 13 கிலோ எடையுள்ள தங்க கவசத்தை கடந்த 2014 -ல் ஆண்டு முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா தங்க கவசம் வழங்கினார்.இந்த தங்க கவசம் மதுரை அண்ணா நகரில் உள்ள வங்கிப் பெட்டகத்தில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் தேவா் ஜெயந்தி விழாவின்போது இந்த தங்க கவசம் அணிவிக்கப்படும். நினைவிட பொறுப்பாளா் மற்றும் அதிமுக நிர்வாகிகள் கையெழுத்திட்டு இந்த தங்க […]

கோவில்பட்டி

ஓட்டப்பிடாரத்தில் புதிய நீதிமன்றம்; மாவட்ட நீதிபதி திறந்து வைத்தார்

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் பகுதி பொதுமக்கள் ஓட்டப்பிடாரத்தில் நீதிமன்றம் அமைக்கப்பட வேண்டும் என சுமார் 50 ஆண்டு காலமாக கோரிக்கை விடுத்து வந்தனர். பொதுமக்களின் கோரிக்கையை சென்னை உயர்நீதிமன்றம் பரிசீலனை செய்து தூத்துக்குடி, விளாத்திகுளம், கோவில்பட்டி ஆகிய நீதிமன்றங்களை பிரித்து ஓட்டப்பிடாரத்தில் நீதிமன்றம் அமைக்க கடந்த பிப்ரவரி மாதம் அரசாணை வெளியிடப்பட்டது.இதனைத் தொடர்ந்து ஓட்டப்பிடாரம், புதியம்புத்தூர், தட்டப்பாறை, தருவைகுளம், மணியாச்சி, புளியம்பட்டி, பசுவந்தனை, எப்போதும் வென்றான், மணியாச்சி ரயில்வே இருப்புப்பாதை காவல் நிலையம், நாரைக்கிணறு, கடம்பூர் மகளிர் […]

செய்திகள்

அ.தி.மு.க. 51-வது ஆண்டு தொடக்கம்: தமிழகம் முழுவதும் கட்சி கொடியேற்ற எடப்பாடி பழனிசாமி

சென்னையில் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-51வது ஆண்டு தொடக்கம் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் 1972 ல் எத்தனையோ சோதனைகளுக்கு இடையே தி.மு.க.வை வீழ்த்தவேண்டும் தீய சக்தி என்ற கருணாநிதி குடும்பத்திலிருந்து தமிழகம் விடுபட வேண்டும் என்ற வகையில் கழகம் என்ற மாபெரும் இயக்கத்தைத் தொடங்கி, புரட்சித்தலைவி அம்மாவால் கட்டிக்காக்கப்பட்டு, 50 ஆண்டுகள் நிறைவு செய்த நிலையில் 51வது ஆண்டு தொடங்குகிறது.இந்த வேளையில் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடியார், தலைமைக்கழகத்தில் 17 ம் தேதி […]

கோவில்பட்டி

கோவில்பட்டி அருகே திருநங்கைகளை தாக்கி, கூந்தலை அறுத்து கொடுமை ; வீடியோ வைரலானது

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை அடுத்து கழுகுமலை அருகே 2 திருநங்கைகளை இளைஞர்கள் தாக்கி, அவர்களது கூந்தலை அறுத்து கொடுமைப்படுத்தும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலானது. இந்நிலையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போலீசார் குறிப்பிட்டுள்ளனர்.கோவில்பட்டியை அடுத்த கழுகுமலை அருகே இந்த சம்பவம் நடந்துள்ளது.அந்த வீடியோவில் இரண்டு திருநங்கைகளை ஒரு இளைஞர் ஒருவர் கொடூரமாக தாக்கி கூந்தலை வெட்டி வீசுகிறார். அருகே இன்னொரு திருநங்கை காயங்களுடன் அமர்ந்து இருக்கிறார். இது பார்க்க பரிதாபமாக உள்ளது. மற்றொரு நபர் இந்த சம்பவத்தை […]