• June 8, 2025

கர்ப்பிணிப் பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா

 கர்ப்பிணிப் பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா

தமிழ்நாடு அரசின் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பாக ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் திட்டத்தின் கீழ் ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாப்பிள்ளையூரணி ஊராட்சியில்
கர்ப்பிணிப் பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது.

ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா கலந்து கொண்டு வளைகாப்பு விழாவை துவக்கி வைத்து சீதன பொருட்களை கர்ப்பிணி பெண்களுக்கு வழங்கினார் .பின்னர் அவர்களுக்கு விருந்து பரிமாறப்பட்டது.
இந்நிகழ்வில் தூத்துக்குடி வட்டாட்சியர் ஆர்.செல்வகுமார், தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலர் ராமராஜ், .நாகராஜன், பொறியாளர் தளவாய், மாப்பிள்ளையூரணி ஊராட்சிமன்ற தலைவர் சரவணக்குமார், சுற்றுசூழல் அணி .ரவி, வார்டு உறுப்பினர்கள் பாரதிராஜா, தங்கமாரிமுத்து, ஜேசு, .சக்திவேல் முன்னாள் வார்டு உறுப்பினர் ஆனந்தகுமார், கிளைச் செயலாளர்கள் காமராஜ், ராஜா, மீனவரணி ஆரோக்கியம், சிலுவை மற்றும் அரசு அலுவலர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் கலந்துகொண்டனர்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *