• June 7, 2025

Month: October 2022

செய்திகள்

ஜெயலலிதாவுக்கான ஆஞ்சியோ சிகிச்சையை சுயலாபத்துக்காக சசிகலா தடுத்து இருக்கலாம்; ஆறுமுகசாமி ஆணைய அறிக்கையில்

மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்த ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் அறிக்கை இன்று சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது.அந்த அறிக்கையில் `சசிகலா, டாக்டர். கே.எஸ்.சிவகுமார், அப்போதைய சுகாதரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், அப்போதைய சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் ஆகியோர் குற்றம் செய்தவர்களாக முடிவு செய்யப்பட்டு, ஆறுமுகசாமி ஆணையம் விசாரணைக்கு பரிந்துரைப்பதாக, தகவல் வெளியாகி உள்ளது.மேலும் எய்ம்ஸ் மருத்துவக் குழு 5 முறை அப்பல்லோ மருத்துவமனைக்கு வந்திருந்தாலும் ஜெயலலிதாவுக்கு முறையான சிகிச்சை அளிக்கவில்லை. அமெரிக்காவில் இருந்து வந்த டாக்டர் சமீன் […]

செய்திகள்

திண்டுக்கல் தாடிக்கொம்பு அகரம் முத்தாலம்மன் கோவில் திருவிழா; அம்மன் கண் திறப்பு நிகழ்ச்சியில்

திண்டுக்கல் தாடிக்கொம்புவை அடுத்த அகரம் முத்தாலம்மன் கோவில் திருவிழாவில் முக்கிய நிகழ்வான கண் திறப்பு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. வரலாற்றுச் சிறப்புமிக்க தாடிக்கொம்பு அகரம் முத்தாலம்மன் கோவில் திருவிழா கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை சாட்டுதல் பெற்று நிகழ்ச்சிகள் தொடங்கின. தொடர்ந்து ஒவ்வொரு நாளும் மாலையில் கலை நிகழ்ச்சிகளும் புராண நாடகங்களும் நடைபெற்று வந்தன. அந்நாட்களில் அம்மனின் உற்சவர் மற்றும் பண்டார பெட்டி ஆகியவை கொழுமண்டபத்திற்கு எழுந்தேற்றம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு வந்தன.இத்திருவிழாவின் முக்கிய நிகழ்வாக பொதுமக்களால் […]

கோவில்பட்டி

இந்தியா போஸ்ட் பேமென்ட்ஸ் வங்கியில் மிக குறைந்த பிரிமியம் தொகையில் விபத்து காப்பீடு

கோவில்பட்டி அஞ்சலக கண்காணிப்பாளர் சு.சுரேஷ் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறி இருப்பதாவது:-காப்பீடு திட்ட பலன். சாமானிய மக்களையும் சென்றடையும்படி , இந்தியா போஸ்ட் பேமென்ட்ஸ் வங்கியில் மிக குறைந்த பிரிமியம் தொகையில் விபத்து காப்பீடு செயல்படுத்தப்படுகிறது.அதற்கான வயது 18 முதல் 65-க்குள் இருக்க வேண்டும். விண்ணப்பம் உள்ளிட்ட எந்த காகித பயன்பாடு இன்றி வீடுதேடி தபால்காரர் கொண்டு வரும் ஸ்மார்ட் போன், விரல் ரேகை பதிவு மூலம் 5 நிமிடத்தில் டிஜிட்டல் முறையில் பாலிசி திட்டத்தில் இணையலாம்.விபத்து, உயிரிழப்பு […]

கோவில்பட்டி

கோவில்பட்டி தீப்பெட்டி உற்பத்தியாளர்களுடன் மத்திய மந்திரியை சந்தித்தார் கடம்பூர் ராஜூ; பிளாஸ்டிக் சிகரெட்

சென்னைக்கு வந்த மத்திய மந்திரி பியூஷ் கோயலை , முன்னாள் அமைச்சரும் , சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் செ.ராஜூ , கோவில்பட்டி தீப்பெட்டி உற்பத்தியாளர்களுடன் சந்தித்து பேசினார்.அப்போது தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் பிரச்சினை தொடர்பாக கோரிக்கை மனுவினை வழங்கினார். அந்த மனுவில் அவர் கூறி இருந்ததாவது:-எனது கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதியில் உள்ள தீப்பெட்டி உற்பத்தித் துறையின் சார்பாக உங்கள் இந்தக் கடிதத்தை வழங்குகிறேன், எனது தொகுதியில் கடந்த 90 ஆண்டுகளாக தீப்பெட்டி உற்பத்தித் தொழில்கள் நடைபெற்று வருகின்றன.இந்தத் தொழிலில் […]

கோவில்பட்டி

கள்ளக்காதலுக்கு இடையூறு: மீன் வியாபாரியை எரித்துகொன்ற மனைவி, மகள் உள்பட 3 பேர்

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள குருவிநத்தம் தெற்கு தெருவில் வசித்தவர் ஞானசேகர் (வயது 42). மீன் வியாபாரி. இவருடைய மனைவி சலேத்து ராணி (38). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். இதே ஊரில் மேற்கு தெருவில் குடியிருப்பவர் சுடலையாண்டி மகன் கருப்பசாமி என்ற கார்த்திக் (24). தச்சு தொழிலாளி. திருமணம் ஆகாதவர்.இந்த நிலையில் கருப்பசாமிக்கும், சலேத்து ராணிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. பின்னர் ஞானசேகரின் 15 வயது மகளுடன் கருப்பசாமிக்கு பழக்கம் ஏற்பட்டது. இந்த விஷயம் […]

கோவில்பட்டி

கோவில்பட்டி நீதிமன்றத்தில், மறைந்த வழக்கறிஞர் பரமசிவம் பெயரில் நூலகம் திறப்பு

கோவில்பட்டியில் மறைந்த மூத்த வழக்கறிஞர் ஆர்.பரமசிவம் பெயரிலான நூலகப் பிரிவு மற்றும் அவரது உருவப்படம் திறப்பு விழா நடைபெற்றது. கோவில்பட்டி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற இவ்விழாவில், சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி புகழேந்தி வரவேற்று பேசினார். ம.தி.மு.க. பொதுசெயலர் வைகோ எம்.பி., மறைந்த மூத்த வழக்கறிஞர் பரமசிவம் திருவுருவப் படத்தை திறந்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார். ‘சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் மறைந்த வழக்கறிஞர் பரமசிவம் பெயரிலான நூலக பிரிவை […]

செய்திகள்

தமிழகத்தில் இன்று முதல் 4 நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்பு

சென்னையில் உள்ள மண்டல வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக 17-ந் தேதி (இன்று) முதல் 20-ந் தேதி வரை 4 நாட்கள் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அனேக இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, விருதுநகர், தென்காசி, கன்னியாகுமரி, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, கள்ளக்குறிச்சி, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, புதுக்கோட்டை, […]

கோவில்பட்டி

அப்துல் கலாம் பிறந்த நாள் பேச்சுப்போட்டி ; மாணவிகளுக்கு மரக்கன்றுகள் பரிசு

கோவில்பட்டியில் புரட்சித் திலகம் கல்வி மற்றும் சமூக நல அறக்கட்டளை சார்பில் முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் பிறந்தநாளை முன்னிட்டு அவரது உருவப்படத்திற்கு மாணவ மாணவிகள் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.தொடர்ந்து அப்துல் கலாம் பற்றி பேச்சுப்போட்டி ,ஓவிய போட்டி நடைபெற்றது இந்த போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை புரட்சித் திலகம் கல்வி மற்றும் சமூக நல அறக்கட்டளை நிறுவனத் தலைவர் முத்து கணேஷ் செய்திருந்தார், நிகழ்ச்சியில் கம்பன் […]

செய்திகள்

சீரடி சாய் பிளசிங் அறக்கட்டளை 5-ம் ஆண்டு விழா கோலாகலம்; முன்னாள் அமைச்சர்

சென்னை முகப்பேர் வெள்ளாளர் தெருவில் ஸ்ரீ சீரடி சாய் பிளசிங் அறக்கட்டளை இயங்கி வருகிறது. இந்த அறக்கட்டளை சார்பில் அடிமட்டத்தில் உள்ளவர்களுக்கு பல்வேறு நல உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன,தனது மக்கள் பணியை வெற்றிகரமாக 4 ஆண்டுகள் நிறைவு செய்து 5-வது ஆண்டில் ஸ்ரீ சீரடி சாய் பிளசிங் அறக்கட்டளை அடியெடுத்து வைத்துள்ளது.அறக்கட்டளையின் 5-வது ஆண்டு விழா சனிக்கிழமையன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது.முகப்பேர் வெள்ளாள தெருவில் உள்ள காரிய சக்தி பிரசன்ன விநாயகர் கோவில் அருகே விழா நடந்தது.சீரடி சாய் […]

தூத்துக்குடி

மத்திய அரசை கண்டித்து தி.மு.க. ஆர்ப்பாட்டம் ; இந்தி திணிப்பை எதிர்த்து கோஷம்

தூத்துக்குடி தெற்கு மாவட்ட திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் ஒட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதிக்குக்குட்பட்ட புதுக்கோட்டையில் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம் சி.சண்முகையா தலைமை ,மாநில மாணவரணி துணை செயலாளர் உமரி சங்கர் அஆகியோர் தலைமை தாங்கினார்கள்.தூத்துக்குடி தெற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ராமஜெயம், மாணவரணி அமைப்பாளர் அருண்குமார், ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் இந்தி திணிப்பை எதிர்த்தும் மத்திய அரசின் விரோத போக்கை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட […]