• June 8, 2025

இந்தியா போஸ்ட் பேமென்ட்ஸ் வங்கியில் மிக குறைந்த பிரிமியம் தொகையில் விபத்து காப்பீடு

 இந்தியா போஸ்ட் பேமென்ட்ஸ் வங்கியில் மிக குறைந்த பிரிமியம் தொகையில் விபத்து காப்பீடு

கோவில்பட்டி அஞ்சலக கண்காணிப்பாளர் சு.சுரேஷ் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறி இருப்பதாவது:-
காப்பீடு திட்ட பலன். சாமானிய மக்களையும் சென்றடையும்படி , இந்தியா போஸ்ட் பேமென்ட்ஸ் வங்கியில் மிக குறைந்த பிரிமியம் தொகையில் விபத்து காப்பீடு செயல்படுத்தப்படுகிறது.
அதற்கான வயது 18 முதல் 65-க்குள் இருக்க வேண்டும். விண்ணப்பம் உள்ளிட்ட எந்த காகித பயன்பாடு இன்றி வீடுதேடி தபால்காரர் கொண்டு வரும் ஸ்மார்ட் போன், விரல் ரேகை பதிவு மூலம் 5 நிமிடத்தில் டிஜிட்டல் முறையில் பாலிசி திட்டத்தில் இணையலாம்.
விபத்து, உயிரிழப்பு , நிரந்தர முழு ஊனம், நிரந்தர பகுதி ஊனம், பக்கவாதம் போன்ற பாதிப்புக்கு 10 லட்சம் ரூபாய் விபத்து காப்பீடு பெறலாம்.
விபத்தில் உள் நோயாளி செலவுக்கு அதிகபட்சம் ரூ.60 ஆயிரம், புறநோயாளி செலவுக்கு ரூ.30 ஆயிரம், விபத்தில் பாதிக்கப்பட்டவரின் இரு குழந்தைகள் கல்வி செலவுக்கு ரூ. 1 லட்சம், மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நாளுக்கு தினப்படியாக தலா ரூ.1000 வீதம் 9 நாளுக்கு கிடைக்கும்.
விபத்தில் பாதிக்கப்பட்டவரை பார்க்க பயணிக்கும் குடும்பத்த்னரின் பயண செலவுக்கு அதிகபட்சம் ரூ. 25 ஆயிரம் , ஈமக்காரியம் செய்ய 5 ஆயிரம் ரூபாய் உண்டு. இத்தகைய பலன்களை பெற ஆண்டுக்கு ரூ.399 பிரிமியம் செலுத்தினால் போதும்.
விபத்து காப்பீடு பாலிசி எடுப்பதன் மூலம் எதிர்பாராமல் நடக்கும் விபத்தால் பாதிப்பு, உயிரிழப்பு போன்ற சம்பவம் மூலம் குடும்பத்தின் எதிர்காலத்ஜ்தை உரு செய்ய முடியும் என்பதால் அருகில் உள்ள அஞ்சலகங்க்களை அணுகி, இந்த காப்பீடு திட்டத்தில் இணைந்து பயன்பெறலாம்.
மேலும் விவரங்களுக்கு தங்கள் அருகில் உள்ள அஞ்சலகம் அல்லது இந்தியா போஸ்ட் பேமென்ட்ஸ் வங்கியை 04632 210488 மற்றும் 9840596804 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *