கோவில்பட்டி தீப்பெட்டி உற்பத்தியாளர்களுடன் மத்திய மந்திரியை சந்தித்தார் கடம்பூர் ராஜூ; பிளாஸ்டிக் சிகரெட் லைட்டர்கள் இறக்குமதிக்கு தடை விதிக்க வலியுறுத்தல்

சென்னைக்கு வந்த மத்திய மந்திரி பியூஷ் கோயலை , முன்னாள் அமைச்சரும் , சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் செ.ராஜூ , கோவில்பட்டி தீப்பெட்டி உற்பத்தியாளர்களுடன் சந்தித்து பேசினார்.
அப்போது தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் பிரச்சினை தொடர்பாக கோரிக்கை மனுவினை வழங்கினார். அந்த மனுவில் அவர் கூறி இருந்ததாவது:-
எனது கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதியில் உள்ள தீப்பெட்டி உற்பத்தித் துறையின் சார்பாக உங்கள் இந்தக் கடிதத்தை வழங்குகிறேன், எனது தொகுதியில் கடந்த 90 ஆண்டுகளாக தீப்பெட்டி உற்பத்தித் தொழில்கள் நடைபெற்று வருகின்றன.
இந்தத் தொழிலில் பெரும்பாலானோர் பெண்கள் தான் ஈடுபட்டுள்ளனர். ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் தங்கள் வாழ்வாதாரத்திற்காக இந்த தொழில் சார்ந்து இருக்கிறார்கள்.
தீப்பெட்டி தொழில் என்பது கோவில்பட்டி தொகுதியின் முக்கிய பொருளாதார வளர்ச்சியாக இருக்கிறது. தீப்பெட்டி ஏற்றுமதி மூலம் ரூ.400 கோடி அளவில் அந்நியச் செலாவணி ஈட்டி தரப்படுகிறது.
இந்த தொழில்கள் தற்போது பாகிஸ்தான், இந்தோனேசியா, சீனா போன்ற அண்டை நாடுகளின் ஏற்றுமதி சந்தையில் பல்வேறு சவால்களை எதிர்கொள்கின்றன. சீனாவில் தயாரிக்கப்பட்ட பிளாஸ்டிக் சிகரெட் லைட்டர்கள் சட்டப்பூர்வமாகவும் சட்டவிரோதமாகவும் இறக்குமதி செய்யப்படுகின்றன, மேலும் அதன் விலை 10 ரூபாய். இதற்கு 20 தீப்பெட்டிகளை மாற்றலாம். ‘
இந்த சிகரெட் லைட்டர் பிளாஸ்டிக்கால் ஆனது மற்றும் அவர்கள் பயன்படுத்தும் எரிபொருளால் அது சுற்றுச்சூழலையும் மக்களின் ஆரோக்கியத்தையும் கெடுக்கிறது, இந்த சவால்களால் தொழில்துறையின் உற்பத்தி அளவு பாதிக்கப்படுகிறது. தொழிலாளர்கள் கச்தத்துக்கு ஆளாகிரார்கள்.
எனவே, இவ்விவகாரத்தில் மாண்புமிகு அமைச்சர் உடனடியாக தலையிட்டு, அத்தகைய பிளாஸ்டி சிகரெட் லைட்டர்களை இறக்குமதி செய்வதை தடைசெய்து, தீப்பெட்டி தொழிலை சார்ந்திருக்கும் குடும்பங்களின் வாழ்வாதாரத்தைக் காப்பாற்றுமாறும் கேட்டுக்கொள்கிறேன்.
மேற்கண்டவாறு மனுவில் கடம்பூர் ராஜூ கூறி உள்ளார்,
.
