• June 7, 2025

Month: October 2022

செய்திகள்

காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவர் யார்? ஓட்டு எண்ணிக்கை தொடக்கம்

கடந்த 2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்ததால், காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து ராகுல்காந்தி விலகினார். இடைக்கால தலைவராக சோனியாகாந்தி பொறுப்பேற்றார்.இதைத்தொடர்ந்து, கட்சிக்கு முழுநேர தலைவரை தேர்ந்தெடுக்க கடந்த 17-ந்தேதி தேர்தல் நடத்தப்பட்டது. மல்லிகார்ஜுன கார்கேவும், சசிதரூரும் போட்டியிட்டனர். நாடு முழுவதும் 68 இடங்களில் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு இருந்தன. 9 ஆயிரத்து 915 மாநில காங்கிரஸ் கமிட்டி பிரதிநிதிகள் ஓட்டுப்போட தகுதி பெற்றிருந்தனர். அவர்களில் 9 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்டோர் வாக்களித்தனர்.ஓட்டு பதிவு […]

செய்திகள்

தடையை மீறி போராட்டம்; எடப்பாடி பழனிசாமி-எம்.எல்.ஏ.க்கள் கைது

சட்டசபையில் அ.தி.மு.க. எதிர்க்கட்சி துணைத்தலைவர் இருக்கை ஓ.பன்னீர் செல்வத்திற்கு ஒதுக்கப்பட்டது. சபாநாயகரின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் இன்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் கருப்பு சட்டை அணிந்து வந்து இருந்தனர்,சென்னை வள்ளுவர்கோட்டத்தில் இன்று காலை போராட்டம் தொடங்கியது. ஆனால், இந்த போராட்டத்திற்கு போலீசார் அனுமதி அளிக்கவில்லை. ஆனாலும், தடையை மீறி எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.இந்நிலையில், தடையை மீறி போராட்டம் நடத்தியதாக எடப்பாடி […]

கோவில்பட்டி

தூத்துக்குடி துப்பாக்கி சூடு; குற்றவாளிகளைக் கூண்டில் ஏற்றுக-வைகோ

ம.தி.மு.க. பொதுசெயலாளர் வைகோ இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் நாசகார நச்சு ஆலையை மூடக் கோரி நடந்த போராட்டத்தின் 100 ஆவது நாளான 2018 மே 22 அன்று பொதுமக்கள் அணிதிரண்டு ஆட்சியர் அலுவலகம் நோக்கி அமைதிவழியில் பேரணி நடத்தியபோது, திட்டமிட்டு வன்முறை ஏவப்பட்டது. அதன் காரணமாக தூண்டிவிடப்பட்ட கலவரத்தை அடக்குவதாக பொதுமக்கள் மீது காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில், ரஞ்சித்குமார், கிளாஸ்டன், கந்தையா, தமிழரசன், சண்முகம், மாணவி ஸ்னோலின், அந்தோணி செல்வராஜ், மணிராஜ், […]

செய்திகள்

ஆறுமுகசாமி ஆணையத்தின் குற்றச்சாட்டுகளை முற்றிலும் மறுக்கிறேன்-எந்த வித விசாரணையையும் சந்திக்க தயார்; சசிகலா

ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஆறுமுகசாமி ஆணையம் வெளியிட்டுள்ள கருத்துகளுக்கு பதில் அளிக்கும் வகையில் வி.கே. சசிகலா ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் கூறி இருப்பதாவது:-என் மீது பழி போடுவதை நான் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. இதுபோன்று என் மீது பழி போடுவது ஒன்றும் புதிதில்லை. என்றைக்கு நான் அம்மாவின் கரத்தைப் பிடித்தேனோ அன்றே ஆரம்பமானது என் மீது இந்த பழி போடும் படலம்புரட்சித்தலைவி அம்மா அவர்களுக்கு புகழஞ்சலி செலுத்துவதற்கு பதிலாக அவருடைய மரணத்தையே அரசியல் ஆக்கினார்கள். […]

தூத்துக்குடி

திருச்செந்தூர் கந்தசஷ்டி திருவிழா: பக்தர்கள் தங்க 12 இடங்களில் தற்காலிக விடுதிகள்; ஆட்சியர்

திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமிதிருக்கோயில் கந்த சஷ்டி திருவிழாவையொட்டி மேற்கொள்ளப்பட்டுவரும் முன்னேற்பாடுபணிகளைமாவட்டஆட்சியர் செந்தில்ராஜ், இன்று நேரில் ஆய்வுமேற்கொண்டார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் கூறியதாவது:-திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமிதிருக்கோயில் கந்த சஷ்டி திருவிழா 25.10.2022 முதல் 31.10.2022 வரை நடைபெறஉள்ளது. 30.10.2022 அன்று சூரசம்ஹாரம் மற்றும் 31.10.2022 அன்று திருக்கல்யாணம் நடைபெறுகிறது.தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியாமுழுவதும் இருந்துகந்த சஷ்டி திருவிழாவிற்குசுமார் 10 லட்சத்திற்கும் மேற்பட்டபக்தர்கள் கலந்துகொள்வார்கள் எனஎதிர்பார்க்கப்படுகிறது. திருவிழாமுன்னேற்பாடுபணிகள் தொடர்பாக அனைத்துதுறை அலுவலர்களுடனான கலந்தாலோசனை கூட்டம் கடந்தவாரம் மாவட்டஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.இன்றையதினம் பக்தர்களுக்குசெய்யப்பட்டுவரும் முன்னேற்பாடு பணிகள் குறித்துஆய்வுசெய்யப்பட்டது. […]

கோவில்பட்டி

பூங்காவாக பயன்படுத்தும் இடத்தில் கட்டிடம் கட்டுவதற்கு எதிர்ப்பு

கோவில்பட்டி அருகே இலுப்பையூரணி ஊராட்சிக்குட்பட்ட நியூ வெங்கடேஷ் நகர் பகுதி மக்கள் அந்த பகுதியில் ஒரு இடத்தை பூங்காவாக பயன்படுத்தி வருகிறார்கள்.அந்த இடத்தில் அங்கன்வாடி கட்டிடம் அமைக்க ஏற்பாடு நடந்து வருவதாக சொல்லபப்டுகிறது. இதற்கு அந்த பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து இன்று திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்,குடிநீர், வாறுகால் உள்ளிட்ட வசதிகளை செய்து தராமல் அங்கன்வாடி கட்டிடம் கட்டுவதற்கு முனைப்பு காட்டுவது ஏன் என்று பொதுமக்கள் கேள்வி விடுத்து வருகிறார்கள்.

செய்திகள்

ஜெயலலிதா மரணம் விவகாரத்தில் சசிகலா உள்பட 8 பேரிடம் விசாரணை நடத்தி நடவடிக்கை;

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஆறுமுகசாமி ஆணையம் வி.கே.சசிகலா, டாக்டர் சிவகுமார், அப்போதைய சுகாதார துறை செயாளர் ராதாகிருஷணன், சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோர் மீது குற்றம் சுமத்தி விசாரணை நடத்த பரிந்துரை செய்தது.மேலும் அப்பல்லோ மருத்துவமனை தலைவர் பிரதாப் சி, ரெட்டி, அப்போதைய தலைமை செயலாளர் ராமமோகனராவ், டாக்டர்கள் ஓய்.வி.சி.ரெட்டி, பாபு ஆபிரகாம் ஆகியோர் விசாரிக்கப்பட வேண்டும் என்று நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.இதை தொடர்ந்து சசிகலா உள்பட 8 பேர் […]

செய்திகள்

ஜெயலலிதா மரணத்தில் குற்றம்: சசிகலா, சிவகுமார், ராதாகிருஷ்ணன், விஜயபாஸ்கரிடம் விசாரணை நடத்த ஆறுமுகசாமி

மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்த ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் அறிக்கை இன்று சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது.’அந்த அறிக்கையில் சசிகலா, டாக்டர். கே.எஸ்.சிவகுமார், அப்போதைய சுகாதரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், அப்போதைய சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் ஆகியோர் குற்றம் செய்தவர்களாக முடிவு செய்யப்பட்டு, ஆறுமுகசாமி ஆணையம் முடிவு செய்து விசாரணைக்கு பரிந்துரைக்கிறது. என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது.மேலும் டாக்டர்.ஓய்.வி.சி.. ரெட்டி மற்றும் டாக்டர்.பாபு ஆபிரகாம் ஆகியோர் மறைந்த முதல்வருக்கு சிகிச்சை அளித்துள்ளனர். அவர்கள் பம்பாய், யு.கே. மற்றும் யு.எஸ்.ஏ. […]

தூத்துக்குடி

ஒரே மேடையில் 3 ஜோடிகளுக்கு திருமணம்

தூத்துக்குடி மறைமாவட்டம் பாத்திமாநகர் பரிசுத்த பாத்திமா அன்னை ஆலயத்தில் 64 ம் ஆண்டு மகோன்னத பெருவிழாவை முன்னிட்டு கோட்டாறு மறைமாவட்ட முன்னாள் ஆயர் மேதகு பீட்டர் ரெம்ஜியூஸ் தலைமையில் கூட்டுத்திருமண திருப்பலி நடைபெற்றது.ஒரே மேடையில் அகஸ்டின்- சுபர்னா, சில்வஸ்டர் -சூர்யா, பிராங்கோ- கிராஸ்வின், ஆகிய 3 ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. 26 கிராம் தங்கத்தாலி, கட்டில், பீரோ, வாஷிங் மிஷின் பிரிட்ஜ் என சுமார் 13 லட்சம் ரூபாய் மதிப்பிலான சீர்வரிசை பொருட்கள் வழங்கப்பட்டன.அதன் பின்னர் […]

செய்திகள்

சட்டசபையில் அமளி: அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் வெளியேற்றம்; சபாநாயகர் நடவடிக்கை

சென்னை தமிழக சட்டசபையின் மழைக்கால கூட்டத் தொடர் நேற்று தொடங்கியது. அ.தி.மு.க.வின் உள்கட்சி பிரச்சினை காரணமாக எடப்பாடி பழனிச்சாமி தரப்பு எம்.எல்.ஏ.க்கள் கூட்டதில் பங்கேற்கவில்லை. ஆனால், ஓ. பன்னீர்செல்வம் தரப்பினர் கூட்டத்தொடரில் பங்கேற்றனர். 2 வது நாளாக சட்டசபை கூட்டம் இன்று காலை 10 மணிக்கு கூடியது. இதில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொண்டனர், இந்நிலையில் சட்டசபை கூட்டத்தொடரில் பங்கேற்க ஓ. பன்னீர் செல்வம் வந்தார். அவர் எதிர்கட்சி துணைத்தலைவர் இருக்கையில் எடப்பாடி பழனிசாமி அருகில் அமர்ந்தார். […]