நடிகர் திலகம் பத்மஸ்ரீ செவாலியே சிவாஜிகணேசனின் 95-வது பிறந்தநாளை முன்னிட்டு, இன்று (1.10.2022) சனிக்கிழமை காலை 11.30 மணிக்கு சென்னை சத்தியமூர்த்தி பவனில் அவரது திருவுருவப் படத்திற்கு, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி அவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்நிகழ்வில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் . சு. திருநாவுக்கரசர், எம்.பி., துணைத் தலைவர்கள் திரு. ஆ. கோபண்ணா, பொன். கிருஷ்ணமூர்த்தி, . டி.என். முருகானந்தம், கீழானூர் ராஜேந்திரன், ப. செந்தமிழ்அரசு, […]
மதுரை புறநகர் பகுதிகளில் உள்ள கோவில்களுக்கு வரும் பக்தர்களிடம் கோபால் என்ற முதியவர், யாசகம் பெற்று வந்தார். அவ்வப்போது அவர், சிலரிடம் சொந்த வாழ்க்கையில் நடந்த சோகங்களைப்பற்றி கூறியுள்ளார். அதாவது, அவர் அரசுத்துறையில் பணியாற்றியதாகவும், ஓய்வு பெற்ற பின்னர் தனக்கு சேர வேண்டிய ஓய்வூதியம் உள்ளிட்ட பணப்பலன்கள் கிடைக்காததால் ஏற்பட்ட வறுமையால் கோவில், கோவிலாக சென்று பிச்சை எடுத்து வாழ்கிறேன் என்று தெரிவித்து இருக்கிறார்.இதையறிந்த பக்தர் ஒருவர், தனது நண்பரான வக்கீல் ஜின்னா என்பவரிடம் கூறியுள்ளார். இதையடுத்து […]
கோவில்பட்டி பாரதிநகர் நகராட்சி நடுநிலைப் பள்ளியில் பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம் தலைமை ஆசிரியர் தேவராணி தலைமையில் நடைபெற்றது, கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக பள்ளி மேலாண்மை குழு உறுப்பினரும், நகராட்சி 32வது வார்டு கவுன்சிலருமான கவியரசன் கலந்து கொண்டார்.கூட்டத்தில் பள்ளி மேலாண்மை மற்றும் வளர்ச்சிக்கான 9 தீர்மானங்களை ஆசிரியை பிளசிங் காருண்யா வாசித்தார், அதனை தொடர்ந்து 9 தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன, ஆசிரியை ஸ்ரீதேவி நன்றி கூறினார், இந்நிகழ்வில் பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள் மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர்கள் […]
கடந்த பிப்ரவரி மாதம் தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. இதில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள கடம்பூர் பேரூராட்சியில் உள்ள 12 வார்டுகளுக்கும் தேர்தல் அறிவிக்கப்பட்டு வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. இதில் 1,2 மற்றும் 11வது வார்டுகளில் சுயேட்சையாக போட்டியிட்ட நாகராஜா, ராஜேஸ்வரி மற்றும் சிவக்குமார் 3 பேரும் போட்டியின்றி தேர்வு பெற்றதாக அறிவிக்கப்பட்டனர்.மற்ற 9 வார்டுகளுக்கும் தேர்தல் நடைபெற இருந்த நிலையில் மாநில தேர்தல் ஆணைத்தின் வழிமுறைகளையும், தேர்தல் விதிமுறைகளையும் பின்பற்றவில்லை என்பதால் கடம்பூர் […]
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தரைமட்டத்தில் இருந்து சுமார் 4500 அடி உயரத்தில் அமைந்துள்ளது சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில்.சதுராசலம், சித்தர்கள் தேசம், சிவன்மலை, மூலிகைவனம் என்று போற்றப்படும் சதுரகிரி கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வார்கள். இக்கோவிலில் ஒவ்வொரு மாதமும் பிரதோஷம், அமாவாசை,பவுர்ணமி என மொத்தம் 8 நாட்கள் மட்டுமே பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது.அந்த வகையில் இங்குள்ள ஆனந்தவல்லி அம்மனுக்கு நவராத்திரி திருவிழா ஒவ்வொரு ஆண்டும் […]
தமிழக அரசின் தலைமை செயலாளர் இறையன்பு, அக்டோபர் 2-ந் தேதி நடக்கும் கிராமசபை கூட்டம் தொடர்பாக வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-2.10.2022 அன்று அனைத்து மாவட்டங்களிலும் கிராம சபை கூட்டம் நடைபெறுகிறது.*கிராமத்திற்கு ஒதுக்கப்படும் நிதி மக்களுக்கு முறையாக தெரிவிக்கப்பட வேண்டும் . 2020 – 2021 மற்றும் 2021- 2022 கடந்த நிதியாண்டில் வரவு செலவுகளை ஊராட்சி அலுவலகத்தில் பிளக்ஸ் பேனர்கள் மூலம் நோட்டீஸ் மூலமும் மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். 500 பேர் கொண்ட கிராமத்தில் […]